Thursday, July 29, 2010

எங்கே செல்கிறது இளைய தலைமுறை...?

.
.
பள்ளிகூடத்தில் நடந்த கோஷ்டிமோதலில், 9ம் வகுப்பு மாணவன்,

துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்து 8ம் வகுப்பு மாணவன்

காயம். இன்று காலை நாளிதழில் வெளிவந்த செய்தி இது. சம்பவம்

நடந்தது, தெற்கு டெல்லியில், `வீர்சந்திரா கார்வெல் பப்ளிக் ஸ்கூல்’

எனும் தனியார் பள்ளியில். மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும்

போது ஏற்பட்ட கோஷ்டி மோதலில், சக மாணவனை துப்பாக்கியால்

சுட்டிருக்கிறான்.




கல்லூரிமாணவர்கள் மோதல், அடிதடி, கொலை என பெருகிவரும்

வன்முறைகள் பள்ளி மாணவர்களிடையேயும் பரவியிருப்பது அதிர்ச்சி

யளிக்கிறது. இளைய தலைமுறை எதை நோக்கி போய் கொண்டிருக்

கிறது? இத்தனை தீவிர விரோதமும், குரோதமும் வளர யார் காரணம்?

குறை எங்கிருக்கிறது?

பெற்றோர் வளர்ப்பிலா? திரைப்படங்களில் வெளிப்படும் அதீத வன்

முறையா?



எனக்கு தெரிந்த இரு குழந்தைகள், ஒரே வகுப்பில் படிப்பவர்கள்,

எப்போதும் ஒன்றாக விளையாடுபவர்கள், பெற்றோர் சண்டை காரண

மாக ஒருவரையொருவர் முறைத்து கொண்டு போகின்றனர். ஆறு

மாதமாக அந்த குழந்தைகள் பேசுவது கூட கிடையாது. இது ஒரு சின்ன

உதாரணம் அவ்வளவே. இப்படி குழந்தைகளிடையே துவேஷத்தை

வளர்த்தால், அவர்கள் பெரியவர்களாகும் போது எப்படியிருப்பார்கள்?

ஏற்கெனவே டிவியும், கம்ப்யூட்டரும் நம் குழந்தைகளின் நட்புவட்டத்தை

குறுக்கி விட்டன. இளைய தலைமுறையினரிடம் அன்னியோன்னியம்,

சகிப்புதன்மை குறைந்து விட்டதையே இந்த வன்முறைகள் உணர்த்து

கின்றன.


என்ன செய்யப் போகிறோம் நாம்..?
.
.

Tuesday, July 20, 2010

கொடிது, கொடிது, வறுமை கொடிது.

.

தெருவில் ஒரே கூச்சலும், களேபரமுமாயிருந்தது. இரண்டு வீடுகள்

தள்ளியிருந்த வேப்ப மரத்தடியில் படுக்க வைக்க பட்டிருந்தான், அந்த

சிறுவன். பத்து, பன்னிரெண்டு வயதுக்குள் இருக்கும் அவனுக்கு. வலி

யால் துடித்துக் கொண்டிருந்தான். வலது கை ஒரு மாதிரி கோணிக்

கொண்டு கிடந்தது. அவனை சுற்றி ஒரேக் கூட்டம். ஆளாளுக்கு ஏதோ

பேசிக் கொண்டிருந்தனர்.



பக்கத்து பள்ளிக்கூடத்து மரத்தில் ஏறி விளையாடியவன், கீழே விழுந்து

கையை ஒடித்துக் கொண்டிருக்கிறான். கூட்டத்திலிருந்த ஒருவர் `அவன்

பாட்டிய எங்கே காணும்’, என்றதும், `அது வேலைக்கு போயிருக்கு,

சாயங்காலம் தான் வரும்’ என்றார் இன்னோருவர். தாயில்லாத அவனை

பாட்டி தான் ஏதோ கூலிவேலை செய்து வளர்த்துக் கொண்டிருந்தார்.

`பண்டார வெளக்காரர் கிட்டே கூட்டிட்டு போங்கப்பா’ என்றார் இன்னொரு

வர். பண்டாரவிளைக்காரர் என்பவர் அந்த சுற்றுபட்டியிலிருக்கும் எல்லா

ஊர்காரர்களுக்கும் எலும்புமுறிவுக்கு கட்டு போட்டு வைத்தியம் செய்பவர்.

அதற்குள் வைத்தியருக்கு யாரோ போன் செய்ய, அவர் பக்கத்து ஊரிலி

ருப்பதாகவும், அங்கு வர இரண்டு்மணி நேரமாகும் என்றும், வலிகுறைய

மாத்திரை கொடுத்து படுக்க வைக்குமாறும் கூறியிருக்கிறார். பக்கத்துவீட்டு

பெண்மணி சோறு வடித்த கஞ்சி கொடுத்து், மாத்திரையும் கொடுத்தார்.



இதற்குள் அவன் பாட்டி தகவல் தெரிந்து வந்து விட்டார்கள். வந்த

வேகத்தில் பையனை நாலு சாத்து சாத்தியது. `அறிவிருக்கா.? கை

ஒடஞ்சி கடக்கவன போட்டு அடிக்கியே’ என எல்லோரும் பிடித்துக்

கொண்டனர்.

`நா என்ன செய்வேன், வைத்தியருக்கு எப்படி ருவா குடுப்பேன்,

ஒவ்வொரு தடவ கட்ட வரும்போதும் அம்பது, நூறுனு குடுக்கனுமே,

நா என்ன செய்வேன். இப்படி தெண்டம் இளுத்து வுட்டுட்டானே’ என

அழுது கொண்டிருந்தாள்.


பாசத்தை புறந்தள்ளியது ஏழ்மை. பாவம், அவள் என்ன செய்வாள்...
.
.

Wednesday, July 14, 2010

குழலினிது..., யாழினிது...,

.
.
u.k.g. படிக்கும் போது...


அம்மா, நாளைக்கு ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங். நீங்க வாங்கம்மா.


சரிப்பா.


இதோ இந்த பட்டு சேலய கட்டிட்டு அழகா வாங்கம்மா.


சரிப்பா.


10th std படிக்கும் போது...


அம்மா, நாளைக்கு பேரண்ட்ஸ் மீட்டிங். பிரின்ஸி உங்கள கண்டிப்பா

கூட்டிட்டு வரச் சொன்னாங்க.


ஏண்டா?


வேறன்ன, க்ளாஸ்க்கு லேட்டா வந்தான், ரெக்கார்ட் நோட் சப்மிட்

பண்ணல, க்ளாஸ்க்கு நோட்டு கொண்டு வரல, இப்டி எதாவது

கம்ப்ளெயிண்ட் பண்ணத்தான். நிறைய டோஸ் வாங்க வேண்டிய

திருக்கும் னு நெனைக்கிறேன். எதுக்கும் கொஞ்சம் சிம்பிளாவே

வாங்க.


...????
.
.

Friday, July 9, 2010

விருதுகள் - அன்பை பகிர்ந்து கொள்ளுதல்.

.
.

.
.
சகோதரி சந்தனமுல்லை `தங்கமகன்’ விருது தந்திருக்கிறார். விருது

பெறுதல் என்பது மிக சந்தோஷமான விஷயம்; எந்த வயதாக இருந்

தாலும். இந்த சந்தோஷத்தை என் வலையுலக உறவுகளோடு பகிர்ந்து

கொள்வது கூடுதல் சந்தோஷம்.


அமுதா.

தீபா.

கண்ணகி.

செ. சரவணக்குமார்.

ராகவன்.


வலையுலகை பொறுத்தமட்டில் இவர்கள் அனைவரும் என்னைவிட

அனுபவம் மிக்கவர்கள் தாம். இருப்பினும் அன்பை பகிர்ந்து கொள்ள

தடையில்லையே. விருது தந்த முல்லைக்கு நன்றிகள்.

விருது பெறுபவர்களுக்கு வாழ்த்துக்கள்.
.
.

Wednesday, July 7, 2010

எனக்கொரு தோழி இருந்தாள்...

.

.
எனக்கொரு தோழி இருந்தாள்;

விடுதி வாழ்வில் ஒரு விடியலாய்,

மனம் இறுக்கமான நேரங்களில் நெருக்கமாய்,

தொலைத்து விட்டேன் அவளை...



அவளுக்கென விருப்பு வெறுப்புகள் இருந்ததில்லை.

என் விருப்புகளே அவள் விருப்புகளாய்,

என் வெறுப்புகளும் அவள் விருப்புகளாய்,

தேடிக் கொண்டிருக்கிறேன் அவளை இன்னமும்...



கடைசிநாளின் புகைப்படம்,

கடிதம் வழிவந்த உன் ப்ரியங்கள்,

உனக்கான என் தேடல்கள்,

பொக்கிஷமாய் அத்தனையும்; நீ பார்க்கவென.


காத்திருக்கிறேன் வேலரசி!

கட்டாயம் நீ கிடைப்பாய்.
.

Thursday, July 1, 2010

மருமகளாக நான்..., நினைவலைகள், தொடர்பதிவு.

.
`மருமகளின் டைரிக்குறிப்புகள்’ என்ற தொடர்பதிவுக்கு தீபா அழைத்திருந்

தார். சந்தனமுல்லையால் தொடங்கப் பட்ட தொடர்பதிவு இது. `டீனேஜ்

டைரிக் குறிப்புகள்’ என்று முல்லையால் தொடங்க பட்ட தொடர்பதிவு,

`பதின்பருவத்து குறிப்புகள்’ என ராகவனால் அழகாக பெயரிடப் பெற்று

வலையுலகெங்கும் வலம் வந்தது. மறுபடியும் நினைவலைகளை மீட்ட

செய்யும் ஒரு அருமையான தொடர்பதிவு.



பிறந்த வீட்டில் இருந்து முற்றிலும் புதிய சூழலில் அடியெடுத்து வைக்கும்

புதுமருமகள், நிறையவே அனுபவங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.

ஆனால் நான் திருமணம் செய்துகொண்டது சொந்த மாமா மகன் என்பதால்

இவ்வாறான அனுபவங்கள் அதிகமில்லை. என் நட்பு வட்டம், கல்லூரியின்

கடைசி நாளில், `பசுமை நிறைந்த நினைவுகளே’ என்று ஆட்டோக்ராப்,

கொஞ்சநாள் உருகி உருகி கடிதங்கள், இவற்றோடு நின்று விட்டதால்,

எனக்கென அழைப்பிதழ்கள் தேவைப் படவில்லை. திருமணப் புடவை,

நகைகள் இவற்றில் அதிக ஆர்வமில்லையென்றாலும், எனக்கு கொண்டு

வரப்பட்ட சட்டைதான், எனக்கும் அதற்கும் சம்பந்தமேயில்லாமல், தொள

தொள வென்றிருந்தது. சட்டையை போட்டதும் மகா எரிச்சல் வந்த

தென்னவோ உண்மை. ஏனென்றால், கல்லூரி முடித்து, வீட்டிலிருந்த

போது `டெய்லரிங்’ கற்று கொண்டு எனக்கான ஜாக்கெட் எல்லாம் நானே

தான் தைப்பேன். `பெயிண்ட் அடித்த மாதிரி போட்டிருக்கியே’னு மற்றவர்

கள் கூறும் அளவுக்கு தைத்துப் போடுவேன். பிறகென்ன... என் பெரிய

அண்ணி தான் அங்கங்கே ஊக்குகள் குத்தி சரி செய்து விட்டார்கள். வாழ்க்

கையும் இப்படித்தான், முன்னபின்னே இருந்தாலும் நமக்கேற்றார் போலசரி

செய்து கொள்ள வேண்டும் என்று சிம்பாலிக்காக சொல்வது போலிருந்தது.

பிறகு தான் தெரிந்தது, அளவுசட்டை மாறிபோய் என் மாமியாரின் அளவில்

தைக்கப் பட்டிருந்தது.



கிராமங்களில் புதுப்பெண்ணுக்கு நிறைய டெஸ்ட் வைப்பார்களாம். காலை

யில் வாசல் தெளிக்க சொல்வார்களாம். தெளிக்கும் முறையை வைத்தே

அவள் சோம்பேறியா, செலவாளியா என்றெல்லாம் தெரிந்து கொள்வார்

களாம். பெண்களுக்கு மட்டும் தானா, ஆண்களுக்கு இல்லையா என்றெல்

லாம் கேட்க கூடாது. இது பெண்களுக்கான (அ)நீதி மட்டுமே. பெண்கள்

தானே வீட்டை நிர்வகிக்கப் போகிறார்கள் என்பதால் இவை ஏற்படுத்தப்

பட்டிருக்கலாம். ஆனால் இவையெல்லாம் இப்போது வழக்கத்தில் இருப்

பதாக தெரிய வில்லை. நல்லவேளை, எனக்கு அப்படி எதுவும் தேர்வுகள்

வைக்க வில்லை. என் அம்மாவும், என் அண்ணிகளுக்கு இப்படியெதுவும்

டெஸ்ட் வைக்க வில்லை. ஆனால் என் நாத்தனாருக்கு, அவள் மாமியார்,

சில மஞ்சள் துண்டுகளை கொடுத்து, அம்மியில் வைத்து தட்ட சொன்னார்

களாம் (பெண்ணின் பொறுமையை தெரிந்து கொள்ள). இவள் தட்டிய

முதல் தட்டிலேயே, அத்தனை மஞ்சள்துண்டுகளும் மூலைக்கொன்றாய்

தெறித்து ஓட, அவள் மாமியார் காணாமல் போன மஞ்சள்துண்டுகளை

இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார். 13 வருடங்கள் ஆகி விட்டன. இன்னும்

கிடைக்க வில்லை.



கணவர்க்கு உள்ளூரிலேயே ஒரு பாக்டரியில் வேலை கிடைத்து விட,

நாங்கள் ஆச்சி(அம்மாவின் அம்மா) வீட்டிலேயே இருந்தோம். நான்

வளர்ந்த, படித்த அதே ஊர் என்பதால் பெரியதாக ஒன்றும் வேறுபாடுகள்

இல்லை. `சாப்ட்ட தட்டை கூட எடுக்காம ஆம்புளப் புள்ள மாதிரிப் போறி

யே’ ன்னு அம்மா திட்டும் போது `நாலு பையனுக்கு எடுக்கீங்க, என் ஒரு

தட்ட மட்டும் எடுக்க முடியாதா?’ என்று அம்மாவிடம் திமிர்த்தனமாய்

பெண்ணியம் பேசிய மாதிரி இங்கே பேச முடியாது. ஆச்சி வயதானவர்கள்.

எல்லாமே நான் தான் கவனிக்க வேண்டும். சமையலில் இருந்து அத்தனை

யும் பழகி கொண்டேன். என் மாமா என்னிடம் `பேங்க் எக்ஸாம் எழுதேன்’

என்றார்கள். மாமியார் அதெல்லாம் வேண்டாம் என்று விட்டார்கள். என்

கணவர்க்கும் அதில் விருப்பமில்லாததால் விட்டு விட்டேன். ஆனால் சில

வருடங்கள் கழித்து, நான் `பியூட்டிஷியன் கோர்ஸ்’ படிக்கப் போகிறேன்,

என்ற போது யாரும் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் வீட்டிலிருந்து

தான் படித்தேன்.



எனக்கு கொஞ்சம் கோபம் வரும் (செல்ல பெண்ணாதலால்). ஆனால் என்

கணவர்க்கு என்னை விட நிறைய கோபம் வரும் என்பதால் நான் பெரிய

கோடு பக்கத்தில் சின்ன கோடாகிப் போனேன். கொஞ்சம் வாக்குவாதம்,

நிறைய அனுசரித்தல்கள்.....! என் கணவரிடம், இப்படி ஒரு பதிவேழுதப்

போகிறேன். உங்களை பற்றி எழுதினால் என்ன செய்வீர்கள் என்றேன்.

`ஆபீஸ்ல போய் மைனஸ் வோட்டு போடுவேன்’ என்றார்.




வாழ்க்கை என்பது யாருக்கும் நினைத்தபடியே முழுமையானதாய்

அமைந்து விடுவதில்லை. அதிர்ஷ்டவசமாய் சிலருக்கு சரியாகஅமைகிறது

துரதிர்ஷ்டவசமாய் சிலருக்கு சகிக்க முடியாமல் போய்விடுகிறது. ஆனால்

பலருக்கு இரண்டுக்கும் இடைப்பட்ட சூழலில் தான் அமைகிறது. அவரவர்

திறமைக்கேற்ப சரிசெய்து கொள்கிறோம். அர்த்தமற்ற பிடிவாதங்களினால்

வாழ்வை தொலைத்துக் கொள்வதை விட, சில பல அனுசரித்தல்களினால்

அழகாக்கிக் கொள்ளலாம்.

` ஒன்றை அடைய முடிந்தால் மற்றொன்றை இழக்க நேரிடுகிறது

ஒன்றை இழக்க நேர்ந்தால் பிறிதொன்றை அடைய முடிகிறது’.

என்கிறார் அமெரிக்க கவிஞர் எமர்சன். இதேதான் வாழ்க்கையும்.


தங்கள் அனுபவங்களை நம்முடன் பகிர நான் சுந்தரா, ஹூஸைனம்மா

இருவரையும் அழைக்கிறேன்.
.