Showing posts with label அழகுநிலயம். Show all posts
Showing posts with label அழகுநிலயம். Show all posts

Wednesday, August 25, 2010

அகத்தின் அழகு, முகத்தில்.....

.

`.என்ன வலி அழகே’ என சகோதரி முல்லை, ஒரு வாடிக்கையாளராக

தன் அழகுநிலைய அனுபவங்களை நகைச்சுவையாக எழுதி இருந்தார்.

அவரது கருத்தில், ஒரு அழகுக் கலை நிபுணராக நான் முரண் படுவதால்,

இந்த பதிவு.



அழகாகத் தோன்ற வேண்டும் என்ற எண்ணம், ஆண், பெண் இருவருக்

குமே பொதுவானது. வேண்டுமானால் பெண்களிடம் கொஞ்சம் கூடுதலாக

இருக்கலாம். புறஅழகுக்கு ஏன் முக்கியத்துவம் தர வேண்டும் எனும்

கேள்வி எழலாம். அக அழகை வெளிப்படுத்தவும் புறஅழகு தேவையே.

பார்த்த மாத்திரத்தில் மனதில் பதிவது புறத் தோற்றமே! எனக்கு புறஅழகு

முக்கியமில்லை, இயல்பாக இருப்பதையே விரும்புவேன் என்பவர்கள் கூட

ஏதோ ஒரு வகையில் புறத்தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ளத்தான்

செய்கின்றனர்.



அழகுப்படுத்திக் கொள்ளுதல் என்பது இப்போதில்லை, பழங்காலத்திலே

இருந்திருக்கிறது. சருமம் பளபளக்க கழுதைப்பாலில் ஒரு அரசி குளித்

தாளாம். ஆயக்கலைகள் 64ல் ஒப்பனைக் கலையும் உண்டு என படித்த

நினைவில் பார்த்தால், ` முகஒப்பனை, முடிக்கு சாயம் தடவுதல், உடை

களுக்கேற்ப நகைஅலங்காரம் என தனித்தனியாக நான்கு வகைக்கலைகள்

இடம் பெற்றிருந்தது ஆச்சர்யப் படுத்தியது.



அழகுநிலையம் செல்வதென்பது வெறுமனே அலங்காரம் செய்து கொள்ள

என தவறாக எண்ணுகின்றனர். நம்மிடம் இருக்கும் சிற்சில குறைகளை

நிவர்த்தி செய்து கொள்ளவும் தான். மேல்நாட்டு பெண்கள் போல முடிக்கு

சாயம் தடவிக்கொள்ளுதல் போன்ற சிலவற்றை வேண்டுமெனில் ஆடம்பர

மாக கருதலாம். ஆனால் சில அடிப்படை தேவைகளுக்காக செல்வோரின்

எண்ணிக்கை மிக அதிகம்.



முதலில் `வாக்ஸிங்’ பற்றி பார்ப்போம். கை கால்கள், முகம் போன்ற

வற்றில் வளரும் முடிகளை நீக்க வாக்ஸிங் செய்யப் படுகின்றது. ஹேர்

ரிமூவர் க்ரீம்கள் பயன் படுத்தினால் ஒரே வாரத்தில் வளர்ந்து விடும்

என்பதாலும், அதில் உள்ள ரசாயனங்கள் பலருக்கு `அலர்ஜி’ ஏற்படுத்து

கின்றன என்பதாலும் இதை நாடுகின்றனர். கைகால்களில் நீக்குவ

தென்பது வேண்டுமெனில் அவரவர் விருப்பத்தை பொறுத்து அமையலாம்.

ஆனால் மேலுதட்டில், நாடியில், இலேசாக அல்ல, பளிச்சென்று தெரியும்

அளவுக்கு சிலருக்கு முடி வளர்கின்றது. மரபு ரீதியாகவோ, அல்லது

ஹார்மோன் குறைபாட்டினாலோ இப்போது பல பெண்களிடம் இந்த

குறைபாடு காணப் படுகின்றது. பொதுவிடங்களில் பிறரின் கேலிப்

பார்வைக்கும், குத்தல் பேச்சுக்கும் ஆளாகும் இவர்கள் மிக மோசமாக

தாழ்வு மனப்பான்மை அடைகிறார்கள். இவர்களூக்கு வாக்ஸிங் அவசிய

மானதாகி விடுகிறது. நான் இயல்பாகத் தான் இருப்பேன் என நிச்சயம்

இந்த பரிதாபத்துக்குரியவர்களால் வாதம் செய்ய முடியாது.




சாதாரணமான சருமம் கொண்டவர்களுக்கு ஃபேஷியல் தேவையில்லாமல்

இருக்கலாம். ஆனால் எண்ணெய் வழியும் முகமும், சொரசொரப்பாக

வொயிட் ஹெட்ஸ், ப்ளாக் ஹெட்ஸ் போன்றவையும், பெரிய பெரிய

பருக்களும் நிறைந்த முகம் பெற்றவர்களுக்கு `அரோமா ஃபேஷியலோ,

ஹெர்பல் ஃபேஷியலோ, ஒரு மருத்துவமாக தேவைப் படுகின்றது.

சரியான முறையில் செய்யப் படும் ஃபேஷியல் மஸாஜ் தூக்கம் வருவது

போல சுகமாகத் தான் இருக்கும். `ப்ளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ்

நீக்குவது தான் வலி தரும். ஆனால் தாங்க முடிந்த அளவில் தான்.

மருத்துவரிடம் ஊசி போட்டுக் கொள்வதில்லையா அதுபோல. ஆனால்

உரித்த கோழி உதாரணம் எல்லாம் மிக அதிகம். (முல்லை இதை

நகைச்சுவைக்காகத் தான் சொல்லியிருப்பீர்கள் என்றே நினைக்கிறேன் ).



புருவம் திருத்திக் கொள்வதென்பது இப்போதெல்லாம் மிகமிக சாதாரண

விஷயமாகி விட்டது. சரியான அளவில், அல்லது கொஞ்சம் சுமாராக

அமைய பெற்றவர்கள் அதை அநாவசியம் என நினைக்கலாம். ஆனால்

அதுவே அதிகமாக பாதி நெற்றியை மறைக்கும் அளவுக்கு இருந்தால்

அவசியமாகி விடுகிறது.. முதலில் ஓரிரு முறை வலி தெரியும்.

தொடர்ந்து செய்யும் போது வலி மிக சாதரணமாகி விடும். ஐந்து

அல்லது பத்து நிமிடங்களில் திருத்திக் கொள்ளலாம் .எட்டாவது,

ஒன்பதாவது படிக்கும் பெண்கள் கூட வருகிறார்கள். +2, அல்லது

காலேஜ் படிக்கும் போது வாருங்கள் என துரத்த வேண்டியருக்கிறது.


.




.





ஒருமுறை, பக்கத்தில், ஒரு குக்கிராமத்தில் இருந்து ஒருப் பெண்ணை

அவள் தாயார் அழைத்து வந்திருந்தார். வயலில் வேலை செய்பவர்கள்.

அவர்கள். அந்த பெண்ணுக்கு திருமணம் பேசிவைத்திருப்பதாகவும்,

பெண்ணைப் பார்த்து சரியென்று விட்டால் உடனே திருமணம் என்றும்

கூறினார். அத்தனை அடர்த்தியான, புருவத்தை நான் பார்த்ததே

இல்லை. சுமார் 1 1/2 இஞ்ச் அகலத்தில் நெற்றிதெரியாதபடி வளர்ந்

திருந்தது. படத்தில் இருப்பதை விடவும் இரண்டு அல்லது மூன்று

மடங்கு இருக்கும். சரிசெய்யும் போது முகச்சுழிப்போ, சிணுங்கலோ

அவளிடம் இல்லை. சரி செய்யப்பட்டபின் பெண்ணின் முகத்தைப்

பார்த்த அம்மா சந்தோஷத்தில், ` நீ நல்லாயிருக்கணும் மா’ என்று

வாழ்த்திய வார்த்தைகளில் அந்த தாயின் வலி வெளிப்பட்டது.

அவளுக்கு திருமணம் முடிவாகி, திருமணத்துக்கு முன்னரும் வந்து

புருவம் திருத்திக் கொண்டது, கூடுதல் சந்தோஷம்...



இப்போதெல்லாம் பெண்கள் அதிக அளவில் வேலைக்கு செல்கின்றனர்.

அதனால் அதிக அளவு தம் தோற்றத்தில் அக்கறை எடுத்து கொள்

கின்றனர். கணவர் அல்லது நண்பரின் வற்புறுத்தலுக்காக அழகு

நிலையம் செல்வதாக கூறும் பெண்கள் மிக சொற்பமே! `அவர் மட்டும்

தலைக்கு, மீசைக்கு டை அடித்து கொள்கிறார்., என்னை பார்லருக்கு

அனுப்ப மாட்டேங்குறார்’ என்னும் பெண்கள் தாம் அதிகம்.



ஒரு ஆண் இண்டர்வியூ க்கு செல்லும் போது, முடி வெட்டி, `ஷேவ்’

செய்து, திருத்தமான உடை உடுத்தி போவதில்லையா? என்னிடம்

நிறைய திறமைகள் இருக்கின்றன, நான இயல்பாகத்தான் இருப்பேன்

என கலைந்த ஆடைகளுடன், சவரம் செய்யாத முகத்துடன் சென்றால்

என்ன நடக்கும்? பல சமயங்களில் புறத் தோற்றமும், மிக மிக

அவசியமே! `ஏன் ஷேவ் பண்ணிக்கலை’ என்று ஆணிடம் கேடபதைப்

போல ஏன் `ஐ ப்ரோ பண்ணிக்கலை’ என பெண்ணிடம் கேட்கும் காலம்

விரைவில் வரலாம்.


இன்னும் நிறைய குறிப்பிடலாம். பதிவு ஏற்கனவே பெரிதாகி விட்டது.

.