.
ஐந்து நாட்களாக குடிதண்ணீர் வரவில்லை. எங்கேயாவது உடைப்பு ஏற்பட்டிருக்கும்; சரி செய்ததும் வந்துவிடும் என்று நம்பிக்கையோடு இரண்டு நாட்கள் காத்திருந்த மக்கள் மூன்றாவது நாளும் வராததால், வார்டு கவுன்சிலர், பஞ்சாயத்துபோர்டு நிர்வாகிகளிடம் முறையிட்டனர். அதன்பின்னர் தான் விஷயமே தெரிய வந்தது.
அரசியல்தலைவரின் சிலை திறப்புவிழாவு்க்கு வருகை தரும் மத்தியமந்திரி ஜி.கே. வாசனை வரவேற்க கட்அவுட்கள், பேனர்கள் வைப்பதற்காக குழிதோண்டிய தொண்டர்களின் கைங்கர்யத்தால் குடிநீர் குழாய் உடைந்து விட்டதாம். சரிசெய்ய வேண்டிய பஞ்சாயத்து நிர்வாகமோ, அவர்கள் பேனரை அகற்றினால் தான் நாங்கள் சரி பண்ண முடியும் என மிகப் பொறுப்பாக பதிலளித்துள்ளனர். ஏனெனில் பஞ்சாயத்து நிர்வாகிகள் அ.தி.மு.க.வினர்.
நேற்றிரவே விழா முடிந்து விட்டது. தலைவர் வருகைக்காக நான்கு நாட்கள் முன்னரே சுறுசுறுப்பாக பேனர் வைக்க குழிதோண்டிய புண்ணியவான்கள், இன்னும் அதை அகற்றாததால், வெற்றிகரமான ஐந்தாவது நாளாக இன்றும் குடிதண்ணீர் வரவில்லை.
மக்கள் காலிக்குடங்களுடன் குடிதண்ணீருக்காக அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். ஐம்பதடி பேனரில் ``மணிமுத்தாறு அணை தந்த மாவீரராக’’ தலைவர் சிரித்துக் கொண்டிருக்கிறார்.
.
Showing posts with label சமூகம்.. Show all posts
Showing posts with label சமூகம்.. Show all posts
Tuesday, January 25, 2011
Monday, December 13, 2010
விட்டில் பூச்சிகள்.
.
அந்த வீட்டை கடந்து செல்கையில் அவளைப் பார்த்தி்ருக்கிறேன். புதிதாக
குடிவந்திருந்தார்கள் போலும். நைட்டி அல்லது சுடிதார் அணிந்து வாசலில்
அமர்ந்திருப்பாள். பக்கத்துவீட்டு சிறுபெண்களை அழைத்து வைத்து பேசிக்
கொண்டிருப்பாள். குழந்தைத்தனம் மாறாத முகம். கல்லூரிமாணவி போல்
இருந்தாள். ஆனால் கழுத்தில் இருந்த தாலி திருமணம் ஆனவள் என்பதை
பறைசாற்றியது. நிரம்பவும் சின்னப் பெண்ணாயிருக்கிறாளே எண்ணமிட்ட
படியே கடந்து சென்றுவிடுவேன். சில நாட்களிலேயே அவளைப் பற்றிய
செய்திகள் தெரிய வந்தன. அவள் சென்னையை சேர்ந்தவள் என்பதும்,
பெற்றோரிடம் சொல்லிக்கொள்ளாமல் அவள் கணவன் என சொல்லிக்
கொள்ளும் நபரோடு வந்துவிட்டாள் என்பதும், அந்தநபர்க்கு 45 வயதுக்கு
மேலிருக்கும் என்பதும் தெரிந்தது. அதன்பின் அவளைப் பார்க்கையில்
எரிச்சல் கலந்த பச்சாதாபம் தோன்றும்.
ஒரு மாதம் கூட ஆகியிருக்காது. என்னப் பிரச்சனையோ, அந்தப்பெண்
தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்கொளுத்திக் கொண்டாள்
என்றும், மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்
பட்டிருக்கிறாள் என்றும் அதிர்ச்சியோடு பேசிக் கொண்டார்கள். அவள்
கணவன் என சொல்லிக் கொண்ட நபர், போலிஸ், விசாரணைக்கு பயந்து
எங்கோ ஓடிவிட்டான். அந்தப் பெண்ணைப் பற்றிய விபரங்கள், பெற்றவர்,
முகவரி எதுவும் தெரியாத நிலையிலே அந்த பரிதாபத்துக் குரியவள்
இறந்து விட்டாள். பூட்டிக்கிடக்கும் அந்த வீட்டை கடக்க நேர்கையில்
அந்த குழந்தைத்தனம் மாறாத முகம் நினைவுக்கு வந்து சங்கடப்
படுத்துக்கிறது.
சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்த இன்னொரு சம்பவமும் நினைவுக்கு
வருகிறது. அந்தப்பெண்ணுக்கும் 18வயது போல் தான் இருக்கும். ஒரு
கடையில் வேலை செய்து வந்தாள். நல்ல அமைதியான சுபாவமுடைய
பெண் தான். ஆனாலும் விதியோ அல்லது அவளது மதியோ, கடை
முதலாளியோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவரும் இதேபோல் நடுத்தர
வயதினர் தான். மனைவி, குழந்தைகள் இருந்தனர். அவளுக்கு அம்மா
மட்டும்தான். அந்த ஏழைத்தாயால் அவளைக்கண்டிக்க முடியவில்லையோ
அல்லது எல்லோரும் கூறியது போல் அந்த முதலாளியின் பணம் ஊமை
யாக்கிற்றோ, அவர்கள் பழக்கம் தொடர்ந்தது.
ஊமை ஊரைக் கெடுக்குங்குறது சரியாத்தா இருக்கு’ என்று ஏசுவோரும்
இருந்தனர். `நல்ல புளியங்கொம்பாத்தா புடிச்சிருக்கா’ எனப் பொறாமைப்
படுவோரும் இருந்தனர். அவளும் ஒரு பெண்குழந்தைக்கு தாயானாள்.
அவள் இரண்டாம்முறை கருவுற்ற பின் அவர் வருவது குறைந்து
போயிற்று. அடுத்ததும் பெண் தான். அவரிடமிருந்து சில சமயங்களில்
பணம் மட்டுமே வந்தது. உறவினர்கள் ஏதோ பஞ்சாயத்து பேசினர்.
கொஞ்சம் பணத்துடன் அவளது உறவு தீர்க்கப் பட்டது. `ரெண்டும்
பொண்ணாப் போச்சி, ஆம்புளப்புள்ளனா வந்திருப்பாரு’ என முதலாளி
யின் மோசடிக்கு சப்பைக் கட்டப்பட்டது.
தாயின் அவலநிலை காண சகியாமலோ, தானும் துன்பம் தர வேண்டா
மென்றோ, இரண்டாவது குழந்தை சில நாட்களிலேயே கண்ணை மூடி
விட்டது. இளவயதில் அடுத்தடுத்த இரண்டு பிரசவங்கள், ஒழுங்கான
பராமரிப்பின்மை, மனப்பாரம் எல்லாமாக சேர்ந்து அவளை காசநோயில்
தள்ளியது. அக்கம்பக்கத்தினர் முகத்தில் விழிக்கவும் முடியாமல், ஆற்ற
முடியாத துயரத்துடன் சரியான சிகிச்சையின்றி, குடிசையிலே அடைந்து
கிடந்தவள், ஓரிரு மாதங்களிலேயே இறந்தும் விட்டாள். அவளது
சாவுக்குக் கூட அந்த முதலாளி வரவில்லை.
`இவ ஒழுங்கா இருந்தா இந்த நெலம வ்ந்துருக்குமா?’, `அடுத்தவ
புருசனுக்கு ஆசப் பட்டா இப்பிடி தா ஆவும்‘, என அவளைப் பற்றின
விமர்சனங்கள் தொடர்ந்தன. `ஆம்புளன்னா அப்படித்தா, சேறக் கண்டா
மிதிப்பான், தண்ணியக் கண்டா கழுவுவான், பொம்பளயில்ல ஒழுங்கா
இருக்கனும்’ என ஆண்களின் `கல்யாண குணங்கள்’ நியாயப் படுத்தப்
பட்டன. மகன் தவறு செய்தால், `நீ சரியா இருந்தா, அவன் ஏன் இப்படி
அலைறான்’ என மருமகளை குற்றம் சாட்டும் மாமியார்கள், மருமகன்
தவறு செய்தால் ,`பார்த்து பதவிசா நடந்துக்க’ என்று மகளுக்கு புத்தி
கூறும் அன்னையர்கள், கணவன் தவறு செய்தால், `ஏதோ கெட்டநேரம்’
என்று கையாலாகத்தனதுடன் ஏற்றுக் கொள்ளும் மனைவிகள், என எல்லா
கட்டங்களிலும் ஆண்களின் தவறுகள் அங்கீகரிக்கப் படுகின்றன.
இங்கே, இந்த இரண்டு பெண்களின் செய்கையுமே முட்டாள்த்தனமானது,
ஏற்புடையது அல்ல என்ற போதிலும், இருவருக்குமே வாழ்வின்
சூட்சுமங்கள் புரிபடாத வயது. ஆனால் அந்த ஆண்கள்....? மகள்
வயதொத்த பெண்ணின் வாழ்வை பாழாக்குகிறோம் என்பது தெரியாதா?
அவர்களின் ஏழ்மையை, அறியாமையை உபயோகப்படுத்திக் கொள்வது
புரியாதா?
``பெண் என்பவள் மிதிப்பதற்கும், கழுவதற்கும், சேறோ அல்லது
தண்ணீரோ இல்லை, உயிரும் உணர்வுகளும் நிரம்பிய மனிதப் பிறவி ’’
என்பதை எப்போது உணர்வார்கள்?
.
அந்த வீட்டை கடந்து செல்கையில் அவளைப் பார்த்தி்ருக்கிறேன். புதிதாக
குடிவந்திருந்தார்கள் போலும். நைட்டி அல்லது சுடிதார் அணிந்து வாசலில்
அமர்ந்திருப்பாள். பக்கத்துவீட்டு சிறுபெண்களை அழைத்து வைத்து பேசிக்
கொண்டிருப்பாள். குழந்தைத்தனம் மாறாத முகம். கல்லூரிமாணவி போல்
இருந்தாள். ஆனால் கழுத்தில் இருந்த தாலி திருமணம் ஆனவள் என்பதை
பறைசாற்றியது. நிரம்பவும் சின்னப் பெண்ணாயிருக்கிறாளே எண்ணமிட்ட
படியே கடந்து சென்றுவிடுவேன். சில நாட்களிலேயே அவளைப் பற்றிய
செய்திகள் தெரிய வந்தன. அவள் சென்னையை சேர்ந்தவள் என்பதும்,
பெற்றோரிடம் சொல்லிக்கொள்ளாமல் அவள் கணவன் என சொல்லிக்
கொள்ளும் நபரோடு வந்துவிட்டாள் என்பதும், அந்தநபர்க்கு 45 வயதுக்கு
மேலிருக்கும் என்பதும் தெரிந்தது. அதன்பின் அவளைப் பார்க்கையில்
எரிச்சல் கலந்த பச்சாதாபம் தோன்றும்.
ஒரு மாதம் கூட ஆகியிருக்காது. என்னப் பிரச்சனையோ, அந்தப்பெண்
தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்கொளுத்திக் கொண்டாள்
என்றும், மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்
பட்டிருக்கிறாள் என்றும் அதிர்ச்சியோடு பேசிக் கொண்டார்கள். அவள்
கணவன் என சொல்லிக் கொண்ட நபர், போலிஸ், விசாரணைக்கு பயந்து
எங்கோ ஓடிவிட்டான். அந்தப் பெண்ணைப் பற்றிய விபரங்கள், பெற்றவர்,
முகவரி எதுவும் தெரியாத நிலையிலே அந்த பரிதாபத்துக் குரியவள்
இறந்து விட்டாள். பூட்டிக்கிடக்கும் அந்த வீட்டை கடக்க நேர்கையில்
அந்த குழந்தைத்தனம் மாறாத முகம் நினைவுக்கு வந்து சங்கடப்
படுத்துக்கிறது.
சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்த இன்னொரு சம்பவமும் நினைவுக்கு
வருகிறது. அந்தப்பெண்ணுக்கும் 18வயது போல் தான் இருக்கும். ஒரு
கடையில் வேலை செய்து வந்தாள். நல்ல அமைதியான சுபாவமுடைய
பெண் தான். ஆனாலும் விதியோ அல்லது அவளது மதியோ, கடை
முதலாளியோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவரும் இதேபோல் நடுத்தர
வயதினர் தான். மனைவி, குழந்தைகள் இருந்தனர். அவளுக்கு அம்மா
மட்டும்தான். அந்த ஏழைத்தாயால் அவளைக்கண்டிக்க முடியவில்லையோ
அல்லது எல்லோரும் கூறியது போல் அந்த முதலாளியின் பணம் ஊமை
யாக்கிற்றோ, அவர்கள் பழக்கம் தொடர்ந்தது.
ஊமை ஊரைக் கெடுக்குங்குறது சரியாத்தா இருக்கு’ என்று ஏசுவோரும்
இருந்தனர். `நல்ல புளியங்கொம்பாத்தா புடிச்சிருக்கா’ எனப் பொறாமைப்
படுவோரும் இருந்தனர். அவளும் ஒரு பெண்குழந்தைக்கு தாயானாள்.
அவள் இரண்டாம்முறை கருவுற்ற பின் அவர் வருவது குறைந்து
போயிற்று. அடுத்ததும் பெண் தான். அவரிடமிருந்து சில சமயங்களில்
பணம் மட்டுமே வந்தது. உறவினர்கள் ஏதோ பஞ்சாயத்து பேசினர்.
கொஞ்சம் பணத்துடன் அவளது உறவு தீர்க்கப் பட்டது. `ரெண்டும்
பொண்ணாப் போச்சி, ஆம்புளப்புள்ளனா வந்திருப்பாரு’ என முதலாளி
யின் மோசடிக்கு சப்பைக் கட்டப்பட்டது.
தாயின் அவலநிலை காண சகியாமலோ, தானும் துன்பம் தர வேண்டா
மென்றோ, இரண்டாவது குழந்தை சில நாட்களிலேயே கண்ணை மூடி
விட்டது. இளவயதில் அடுத்தடுத்த இரண்டு பிரசவங்கள், ஒழுங்கான
பராமரிப்பின்மை, மனப்பாரம் எல்லாமாக சேர்ந்து அவளை காசநோயில்
தள்ளியது. அக்கம்பக்கத்தினர் முகத்தில் விழிக்கவும் முடியாமல், ஆற்ற
முடியாத துயரத்துடன் சரியான சிகிச்சையின்றி, குடிசையிலே அடைந்து
கிடந்தவள், ஓரிரு மாதங்களிலேயே இறந்தும் விட்டாள். அவளது
சாவுக்குக் கூட அந்த முதலாளி வரவில்லை.
`இவ ஒழுங்கா இருந்தா இந்த நெலம வ்ந்துருக்குமா?’, `அடுத்தவ
புருசனுக்கு ஆசப் பட்டா இப்பிடி தா ஆவும்‘, என அவளைப் பற்றின
விமர்சனங்கள் தொடர்ந்தன. `ஆம்புளன்னா அப்படித்தா, சேறக் கண்டா
மிதிப்பான், தண்ணியக் கண்டா கழுவுவான், பொம்பளயில்ல ஒழுங்கா
இருக்கனும்’ என ஆண்களின் `கல்யாண குணங்கள்’ நியாயப் படுத்தப்
பட்டன. மகன் தவறு செய்தால், `நீ சரியா இருந்தா, அவன் ஏன் இப்படி
அலைறான்’ என மருமகளை குற்றம் சாட்டும் மாமியார்கள், மருமகன்
தவறு செய்தால் ,`பார்த்து பதவிசா நடந்துக்க’ என்று மகளுக்கு புத்தி
கூறும் அன்னையர்கள், கணவன் தவறு செய்தால், `ஏதோ கெட்டநேரம்’
என்று கையாலாகத்தனதுடன் ஏற்றுக் கொள்ளும் மனைவிகள், என எல்லா
கட்டங்களிலும் ஆண்களின் தவறுகள் அங்கீகரிக்கப் படுகின்றன.
இங்கே, இந்த இரண்டு பெண்களின் செய்கையுமே முட்டாள்த்தனமானது,
ஏற்புடையது அல்ல என்ற போதிலும், இருவருக்குமே வாழ்வின்
சூட்சுமங்கள் புரிபடாத வயது. ஆனால் அந்த ஆண்கள்....? மகள்
வயதொத்த பெண்ணின் வாழ்வை பாழாக்குகிறோம் என்பது தெரியாதா?
அவர்களின் ஏழ்மையை, அறியாமையை உபயோகப்படுத்திக் கொள்வது
புரியாதா?
``பெண் என்பவள் மிதிப்பதற்கும், கழுவதற்கும், சேறோ அல்லது
தண்ணீரோ இல்லை, உயிரும் உணர்வுகளும் நிரம்பிய மனிதப் பிறவி ’’
என்பதை எப்போது உணர்வார்கள்?
.
Thursday, July 29, 2010
எங்கே செல்கிறது இளைய தலைமுறை...?
.
.
பள்ளிகூடத்தில் நடந்த கோஷ்டிமோதலில், 9ம் வகுப்பு மாணவன்,
துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்து 8ம் வகுப்பு மாணவன்
காயம். இன்று காலை நாளிதழில் வெளிவந்த செய்தி இது. சம்பவம்
நடந்தது, தெற்கு டெல்லியில், `வீர்சந்திரா கார்வெல் பப்ளிக் ஸ்கூல்’
எனும் தனியார் பள்ளியில். மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும்
போது ஏற்பட்ட கோஷ்டி மோதலில், சக மாணவனை துப்பாக்கியால்
சுட்டிருக்கிறான்.
கல்லூரிமாணவர்கள் மோதல், அடிதடி, கொலை என பெருகிவரும்
வன்முறைகள் பள்ளி மாணவர்களிடையேயும் பரவியிருப்பது அதிர்ச்சி
யளிக்கிறது. இளைய தலைமுறை எதை நோக்கி போய் கொண்டிருக்
கிறது? இத்தனை தீவிர விரோதமும், குரோதமும் வளர யார் காரணம்?
குறை எங்கிருக்கிறது?
பெற்றோர் வளர்ப்பிலா? திரைப்படங்களில் வெளிப்படும் அதீத வன்
முறையா?
எனக்கு தெரிந்த இரு குழந்தைகள், ஒரே வகுப்பில் படிப்பவர்கள்,
எப்போதும் ஒன்றாக விளையாடுபவர்கள், பெற்றோர் சண்டை காரண
மாக ஒருவரையொருவர் முறைத்து கொண்டு போகின்றனர். ஆறு
மாதமாக அந்த குழந்தைகள் பேசுவது கூட கிடையாது. இது ஒரு சின்ன
உதாரணம் அவ்வளவே. இப்படி குழந்தைகளிடையே துவேஷத்தை
வளர்த்தால், அவர்கள் பெரியவர்களாகும் போது எப்படியிருப்பார்கள்?
ஏற்கெனவே டிவியும், கம்ப்யூட்டரும் நம் குழந்தைகளின் நட்புவட்டத்தை
குறுக்கி விட்டன. இளைய தலைமுறையினரிடம் அன்னியோன்னியம்,
சகிப்புதன்மை குறைந்து விட்டதையே இந்த வன்முறைகள் உணர்த்து
கின்றன.
என்ன செய்யப் போகிறோம் நாம்..?
.
.
.
பள்ளிகூடத்தில் நடந்த கோஷ்டிமோதலில், 9ம் வகுப்பு மாணவன்,
துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்து 8ம் வகுப்பு மாணவன்
காயம். இன்று காலை நாளிதழில் வெளிவந்த செய்தி இது. சம்பவம்
நடந்தது, தெற்கு டெல்லியில், `வீர்சந்திரா கார்வெல் பப்ளிக் ஸ்கூல்’
எனும் தனியார் பள்ளியில். மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும்
போது ஏற்பட்ட கோஷ்டி மோதலில், சக மாணவனை துப்பாக்கியால்
சுட்டிருக்கிறான்.
கல்லூரிமாணவர்கள் மோதல், அடிதடி, கொலை என பெருகிவரும்
வன்முறைகள் பள்ளி மாணவர்களிடையேயும் பரவியிருப்பது அதிர்ச்சி
யளிக்கிறது. இளைய தலைமுறை எதை நோக்கி போய் கொண்டிருக்
கிறது? இத்தனை தீவிர விரோதமும், குரோதமும் வளர யார் காரணம்?
குறை எங்கிருக்கிறது?
பெற்றோர் வளர்ப்பிலா? திரைப்படங்களில் வெளிப்படும் அதீத வன்
முறையா?
எனக்கு தெரிந்த இரு குழந்தைகள், ஒரே வகுப்பில் படிப்பவர்கள்,
எப்போதும் ஒன்றாக விளையாடுபவர்கள், பெற்றோர் சண்டை காரண
மாக ஒருவரையொருவர் முறைத்து கொண்டு போகின்றனர். ஆறு
மாதமாக அந்த குழந்தைகள் பேசுவது கூட கிடையாது. இது ஒரு சின்ன
உதாரணம் அவ்வளவே. இப்படி குழந்தைகளிடையே துவேஷத்தை
வளர்த்தால், அவர்கள் பெரியவர்களாகும் போது எப்படியிருப்பார்கள்?
ஏற்கெனவே டிவியும், கம்ப்யூட்டரும் நம் குழந்தைகளின் நட்புவட்டத்தை
குறுக்கி விட்டன. இளைய தலைமுறையினரிடம் அன்னியோன்னியம்,
சகிப்புதன்மை குறைந்து விட்டதையே இந்த வன்முறைகள் உணர்த்து
கின்றன.
என்ன செய்யப் போகிறோம் நாம்..?
.
.
Thursday, May 27, 2010
டி.வி. சீரியல்கள்.
.
.
போனமுறை அப்பா வந்தபோது
பார்த்தது ;
இப்போதும் புரிகிறது
முன்கதை சுருக்கம்
ஏதும் இல்லாமலே.
கெட்ட வார்த்தையால்
மாமியாரை திட்டும் மாமியாரிடம்
மருமகள் சொன்னாள்,
`மெதுவா அத்தை,
`மாமியார் கொடுமை’ னு
பக்கத்து வீட்ல நெனைக்க போறாங்க’.
நிழல் பார்த்து நிமிர்ந்ததற்கே
தலையை வெட்டிய பரசுராமன்,
இந்த சீரியல்களை
பார்க்க நேர்ந்தால்...?
.
.
.
போனமுறை அப்பா வந்தபோது
பார்த்தது ;
இப்போதும் புரிகிறது
முன்கதை சுருக்கம்
ஏதும் இல்லாமலே.
கெட்ட வார்த்தையால்
மாமியாரை திட்டும் மாமியாரிடம்
மருமகள் சொன்னாள்,
`மெதுவா அத்தை,
`மாமியார் கொடுமை’ னு
பக்கத்து வீட்ல நெனைக்க போறாங்க’.
நிழல் பார்த்து நிமிர்ந்ததற்கே
தலையை வெட்டிய பரசுராமன்,
இந்த சீரியல்களை
பார்க்க நேர்ந்தால்...?
.
.
Sunday, April 11, 2010
பதின்ம தோழி.
என் பதின்ம தோழி அவள். ஆறாம் வகுப்பிலிருந்து, பள்ளியிறுதி வரை
ஒன்றாகவே படித்தோம். படிப்பு, விளையாட்டு, ஆட்டம், பாட்டம் என
அனைத்திலும் ஒன்றாகவே பங்கேற்போம். எங்கள் ரசனைகள் ஒத்தி
ருந்ததால், படித்த கதைபுத்தகங்கள், பிடித்த பாடல்கள் என அனைத்தும்
பகிர்ந்து கொள்வோம். கல்லூரிப் படிப்பை வேறு வேறு கல்லூரிகளில்
தொடர்ந்ததால் நாங்கள் பிரிந்தோம். நான் இளங்கலை படிப்புடன் முற்று
புள்ளி வைத்து விட, அவள் முதுகலை முடித்து, பக்கத்து ஊரில் ஒரு
பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்தாள். பக்கத்து ஊர் தான் என்ற போதும்
அவளை சந்திக்க முடியவில்லை. அப்போது போன் போன்ற தொடர்பு
சாதனங்களும் மிகக் குறைவு என்பதால், எங்களுக்குள் ஒரு இடைவெளி
ஏற்பட்டிருந்தது. எனக்கு திருமணமாகி, இரு பையன்களும் பிறந்து விட,
அவளுக்கு மிக தாமதமாகத் தான் திருமணம் ஆயிற்று. ஏதோ காரணம்,
அவள் திருமணத்துக்குக் கூட செல்ல முடியவில்லை.
ஒருநாள் நான் கேள்விபட்ட அந்த அதிர்ச்சியான செய்தியை என்னால்
நம்பவே முடியவில்லை. என் தோழியின் கணவர், இருதயநோய் காரண
மாக மரணமடைந்து விட்டார் என்றறிந்த போது, மணமாகி ஒன்றறை
ஆண்டுகளே கடந்திருந்த நிலையில், கையில் இரண்டே மாதம் நிரம்பிய
ஆண்குழந்தையோடு, அவளுக்கு வாழ்க்கையே முடிந்து விட்டிருந்தது.
அப்போது அவளுக்கு முப்பது வயது தானிருக்கும். அவளை சந்திக்க
அவா இருந்தாலும், வாய்ப்பு கூடவே இல்லை.
ஏழெட்டு வருடங்கள் கழிந்திருக்கும், அந்த வேளையும் தானே அமைந்தது.
வாக்காளர் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி, எங்கள்
தெருமுனையில் இருந்த பள்ளியில் நடைபெற்றது. நீண்ட வரிசையில்,
ஆண்களும், பெண்களுமாய், நிறைய பேர் காத்திருந்தனர். அங்கு வந்த
கல்லூரிவிரிவுரையாளர் ஒருவர், கொஞ்சம் செல்வாக்கு உள்ளவர், தம்
அருமை மனைவியை அங்கிருந்த இருக்கையில் அமர செய்து விட்டு,
கையெழுத்திடப் பட வேண்டிய ரிஜிஸ்டர் முதலியவற்றை அந்தம்மா இருக்
கும் இடத்திற்கு தூக்கி சென்று கையெழுத்து வாங்க முயன்றார். வரிசை
யில் காத்திருந்த பலரும் ஆட்சேபம் தெரிவித்து கூக்குரல் எழுப்பவும்,
பணி பாதியில் நிறுத்தப்பட்டது. அதிகாரியுடன் விவாதித்துக் கொண்டிருந்த
பெண்குரல் பரிச்சயமானது போலிருக்க, யாரெனப் பார்த்தேன். அவள்தான்
என் பால்ய தோழியேதான். என் கையை அன்புடன் பற்றி, ஆர்வத்துடன்
பேசிய அவளது வெறுமைக் கோலம், அடிவயிற்றை ஏதோ செய்தது.
வீடு அருகிலிருந்ததால் அழைத்து வந்தேன். நீண்ட இடைவெளியை இட்டு
நிரப்பும் அளவுக்கு நிறைய பேசினோம். அவள் மகன் நான்காவது படிப்ப
தாக கூறினாள். போனில் அடிக்கடி பேசிக்கொள்வோம். அவள், அம்மாவு
டன் பக்கத்து ஊரில் இருப்பதையும், பக்கத்து ஊர் பள்ளியில் +2 க்கு ஆசிரி
யையாயிருப்பதையும் அறிந்து கொண்டேன். ஒருநாள் பேசும் போது, அவ
ளது தோற்றம் கூறித்து கேட்டேன். `இப்போது தான் பொட்டு, பூ எல்லாம்
வைத்து கொள்கிறார்களே, நீயும் கொஞ்சம் சாதாரணமாயிருக்கலாமே’
என்றேன். அவள் சார்ந்த சமூகத்தில் மிகவும் கட்டுபாடுகள் உண்டு எனவும்
அவளுக்கு அதிலெல்லாம் பெரிய ஈடுபாடு இல்லை என்றும் கூறினாள்.
அதுவும் உண்மைதான். பள்ளிநாட்களிலேயே, ஏதாவது ஸ்பெஷல்க்ளாஸை
சாக்கிட்டு நாங்களெல்லாம் கலர்கலராய் வரும்போது கூட அவள் சாதாரண
மாயிருப்பாள். அவளது வேலை, இப்போதைய மாணவர்கள், பழையதோழி,
கள் என நிறைய பேசுவோம்.
ஒரு சோம்பேறிதனமான மதியம், மூன்று மணியிருக்கும், அவளிடமிருந்து
போன். எதுவும் பேசாமல் அவள் அழும் குரல் கேட்கவும் பதட்டமானேன்.
என்ன நடந்தது என்ற என் கேள்விக்கு பதில் கூறாமல், அழவும் நான் அவச
ரமாய் அவள் வீடு சென்றேன். அழுகையினூடே அவள் கூறியது, ஆத்திரத்
தையும், வருத்தத்தையும் தந்தது. முன்தினம், அவள் அண்ணன் வாங்கிக்
கொடுத்திருந்த காட்டன் புடவை, சரிகையெல்லாம் போட்டு அழகாய் இருந்
திருக்கிறது, கட்டி சென்றிருக்கிறாள். மறுநாள், அதாவது இன்று, ஸ்டாப்
ரூமில் வைத்து சக ஆசிரியை, இவள் கட்டியிருந்த புடவை போல் வாங்கி
தரும் படி கணவனிடம் கேட்டதாகவும், அதற்கு அவள் கணவன், இப்படி
ட்ரெஸ் பண்ணிட்டு வர்றது மட்டும் தான் அவங்களுக்கு கிடைச்ச சந்தோ
ஷம், உனக்கு அப்படியா என்றும், இன்னும் அசிங்கமாக ஏதேதோ கூறி
யிருக்கிறார். அதை கொஞ்சம் கூட லஜ்ஜையின்றி, அந்த ஆசிரியை கூறி
சிரித்திருக்கிறாள், அதுவும் இவள் காது படவே. இதைக் கேட்டு கூசிப்
போன என் தோழி அரை நாள் விடுப்பு கொடுத்துவிட்டு வீடு வந்து எனக்கு
போன் செய்திருக்கிறாள். `இப்படியெல்லாம் பேச்சு கேட்க வேண்டியிருக்
கும் என்பதினால் தான் பழைய காலத்தில் `உடன்கட்டை’ ஏறியிருப்பார்
கள் போல’ என்று அவள் அழுத போது எனக்கும் தாங்க முடியவில்லை.
ஒரு நாளேனும், அவள் பேச்சில் சுயபச்சாதாபம் தொனித்திருந்ததில்லை.
வாழ்வு குறித்த அவநம்பிக்கை இருந்ததில்லை. இதுதான் வாழ்வு என்றான
பின், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் தெளிவும், நிதானமும் அவ
ளுக்கு வாய்த்திருந்தது. அற்ப விஷயங்களுக்கெல்லாம் அழுது, புலம்பும்
பெண்கள், (சில சமயம் ஆண்களும்கூட), மத்தியில் அவளது இந்த மனோ
திடம் ஆச்சரியமளிப்பதாயிருந்தது. சிலருக்கு அது கர்வமாக கூட தோன்றி
யிருக்கலாம். போதாதற்கு, தலைமைஆசிரியர், மாணவர்கள், பெற்றோர்
மத்தியில் அவளுக்கு நல்ல மதிப்பிருந்தது. அதை பொறுக்க முடியாத,
பொறாமைத் தீயின் வெளிப்பாடே, இந்த கேவலமான தாக்குதல். என்ன
தான் மனோதிடம் இருந்தாலும், ஒரு பலஹீனமான தருணத்தில்,பெண்
மையின் மென்மை வெளிப்படத்தான் செய்கிறது. `இந்த பேச்சுக்கெல்லாம்
மதிப்பு கொடுத்தால் நிறைய பேசுவார்கள். நாளை இதை விடவும் நல்ல
புடவையணிந்து போனால், தன்னால் வாயை மூடிக்கொள்வார்கள். அவர்க
ளிடம் உன் வேதனையை வெளிப் படுத்திக் கொள்ளாதே’ என ஏதேதோ
கூறி அவளை தேற்ற முயற்சித்தேன். மறுநாள்காலை, அவள் பள்ளி
செல்கிறாளா என அறிய போன் செய்தேன். `இதோ கிளம்பிட்டேன்’ என்ற
அவள் குரலில் பழைய தெளிவிருந்தது. எனக்கும் நிம்மதியாயிருந்தது.
+2 தேர்வுகள் நடந்து கொண்டிருந்த சமயம், அவள் பள்ளிதான், அங்கிருக்
கும் அனேக பள்ளிகளுக்கு தேர்வேழுதும் சென்ட்டராக திகழ்ந்தது. என்
இளையமகனும் அங்கேதான் தேர்வெழுத சென்றிருந்தான். தேர்வுக்கு முன்
ஒரு மாணவன், அவள் காலைத் தொட்டு வணங்கி விட்டு ஹாலுக்குள்
சென்றதாக, என் மகன் வந்து ஆச்சரியத்துடன் சொன்னான். இத்தகைய
அன்பும், பாராட்டும், பணியில் அவள் கொண்டிருக்கும் ஈடுபாடுமே, இந்த
மனோதிடத்தை அவளுக்கு தந்திருக்கும் என தோன்றியது. நிறைவாகவும்
இருந்தது.
.
ஒன்றாகவே படித்தோம். படிப்பு, விளையாட்டு, ஆட்டம், பாட்டம் என
அனைத்திலும் ஒன்றாகவே பங்கேற்போம். எங்கள் ரசனைகள் ஒத்தி
ருந்ததால், படித்த கதைபுத்தகங்கள், பிடித்த பாடல்கள் என அனைத்தும்
பகிர்ந்து கொள்வோம். கல்லூரிப் படிப்பை வேறு வேறு கல்லூரிகளில்
தொடர்ந்ததால் நாங்கள் பிரிந்தோம். நான் இளங்கலை படிப்புடன் முற்று
புள்ளி வைத்து விட, அவள் முதுகலை முடித்து, பக்கத்து ஊரில் ஒரு
பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்தாள். பக்கத்து ஊர் தான் என்ற போதும்
அவளை சந்திக்க முடியவில்லை. அப்போது போன் போன்ற தொடர்பு
சாதனங்களும் மிகக் குறைவு என்பதால், எங்களுக்குள் ஒரு இடைவெளி
ஏற்பட்டிருந்தது. எனக்கு திருமணமாகி, இரு பையன்களும் பிறந்து விட,
அவளுக்கு மிக தாமதமாகத் தான் திருமணம் ஆயிற்று. ஏதோ காரணம்,
அவள் திருமணத்துக்குக் கூட செல்ல முடியவில்லை.
ஒருநாள் நான் கேள்விபட்ட அந்த அதிர்ச்சியான செய்தியை என்னால்
நம்பவே முடியவில்லை. என் தோழியின் கணவர், இருதயநோய் காரண
மாக மரணமடைந்து விட்டார் என்றறிந்த போது, மணமாகி ஒன்றறை
ஆண்டுகளே கடந்திருந்த நிலையில், கையில் இரண்டே மாதம் நிரம்பிய
ஆண்குழந்தையோடு, அவளுக்கு வாழ்க்கையே முடிந்து விட்டிருந்தது.
அப்போது அவளுக்கு முப்பது வயது தானிருக்கும். அவளை சந்திக்க
அவா இருந்தாலும், வாய்ப்பு கூடவே இல்லை.
ஏழெட்டு வருடங்கள் கழிந்திருக்கும், அந்த வேளையும் தானே அமைந்தது.
வாக்காளர் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி, எங்கள்
தெருமுனையில் இருந்த பள்ளியில் நடைபெற்றது. நீண்ட வரிசையில்,
ஆண்களும், பெண்களுமாய், நிறைய பேர் காத்திருந்தனர். அங்கு வந்த
கல்லூரிவிரிவுரையாளர் ஒருவர், கொஞ்சம் செல்வாக்கு உள்ளவர், தம்
அருமை மனைவியை அங்கிருந்த இருக்கையில் அமர செய்து விட்டு,
கையெழுத்திடப் பட வேண்டிய ரிஜிஸ்டர் முதலியவற்றை அந்தம்மா இருக்
கும் இடத்திற்கு தூக்கி சென்று கையெழுத்து வாங்க முயன்றார். வரிசை
யில் காத்திருந்த பலரும் ஆட்சேபம் தெரிவித்து கூக்குரல் எழுப்பவும்,
பணி பாதியில் நிறுத்தப்பட்டது. அதிகாரியுடன் விவாதித்துக் கொண்டிருந்த
பெண்குரல் பரிச்சயமானது போலிருக்க, யாரெனப் பார்த்தேன். அவள்தான்
என் பால்ய தோழியேதான். என் கையை அன்புடன் பற்றி, ஆர்வத்துடன்
பேசிய அவளது வெறுமைக் கோலம், அடிவயிற்றை ஏதோ செய்தது.
வீடு அருகிலிருந்ததால் அழைத்து வந்தேன். நீண்ட இடைவெளியை இட்டு
நிரப்பும் அளவுக்கு நிறைய பேசினோம். அவள் மகன் நான்காவது படிப்ப
தாக கூறினாள். போனில் அடிக்கடி பேசிக்கொள்வோம். அவள், அம்மாவு
டன் பக்கத்து ஊரில் இருப்பதையும், பக்கத்து ஊர் பள்ளியில் +2 க்கு ஆசிரி
யையாயிருப்பதையும் அறிந்து கொண்டேன். ஒருநாள் பேசும் போது, அவ
ளது தோற்றம் கூறித்து கேட்டேன். `இப்போது தான் பொட்டு, பூ எல்லாம்
வைத்து கொள்கிறார்களே, நீயும் கொஞ்சம் சாதாரணமாயிருக்கலாமே’
என்றேன். அவள் சார்ந்த சமூகத்தில் மிகவும் கட்டுபாடுகள் உண்டு எனவும்
அவளுக்கு அதிலெல்லாம் பெரிய ஈடுபாடு இல்லை என்றும் கூறினாள்.
அதுவும் உண்மைதான். பள்ளிநாட்களிலேயே, ஏதாவது ஸ்பெஷல்க்ளாஸை
சாக்கிட்டு நாங்களெல்லாம் கலர்கலராய் வரும்போது கூட அவள் சாதாரண
மாயிருப்பாள். அவளது வேலை, இப்போதைய மாணவர்கள், பழையதோழி,
கள் என நிறைய பேசுவோம்.
ஒரு சோம்பேறிதனமான மதியம், மூன்று மணியிருக்கும், அவளிடமிருந்து
போன். எதுவும் பேசாமல் அவள் அழும் குரல் கேட்கவும் பதட்டமானேன்.
என்ன நடந்தது என்ற என் கேள்விக்கு பதில் கூறாமல், அழவும் நான் அவச
ரமாய் அவள் வீடு சென்றேன். அழுகையினூடே அவள் கூறியது, ஆத்திரத்
தையும், வருத்தத்தையும் தந்தது. முன்தினம், அவள் அண்ணன் வாங்கிக்
கொடுத்திருந்த காட்டன் புடவை, சரிகையெல்லாம் போட்டு அழகாய் இருந்
திருக்கிறது, கட்டி சென்றிருக்கிறாள். மறுநாள், அதாவது இன்று, ஸ்டாப்
ரூமில் வைத்து சக ஆசிரியை, இவள் கட்டியிருந்த புடவை போல் வாங்கி
தரும் படி கணவனிடம் கேட்டதாகவும், அதற்கு அவள் கணவன், இப்படி
ட்ரெஸ் பண்ணிட்டு வர்றது மட்டும் தான் அவங்களுக்கு கிடைச்ச சந்தோ
ஷம், உனக்கு அப்படியா என்றும், இன்னும் அசிங்கமாக ஏதேதோ கூறி
யிருக்கிறார். அதை கொஞ்சம் கூட லஜ்ஜையின்றி, அந்த ஆசிரியை கூறி
சிரித்திருக்கிறாள், அதுவும் இவள் காது படவே. இதைக் கேட்டு கூசிப்
போன என் தோழி அரை நாள் விடுப்பு கொடுத்துவிட்டு வீடு வந்து எனக்கு
போன் செய்திருக்கிறாள். `இப்படியெல்லாம் பேச்சு கேட்க வேண்டியிருக்
கும் என்பதினால் தான் பழைய காலத்தில் `உடன்கட்டை’ ஏறியிருப்பார்
கள் போல’ என்று அவள் அழுத போது எனக்கும் தாங்க முடியவில்லை.
ஒரு நாளேனும், அவள் பேச்சில் சுயபச்சாதாபம் தொனித்திருந்ததில்லை.
வாழ்வு குறித்த அவநம்பிக்கை இருந்ததில்லை. இதுதான் வாழ்வு என்றான
பின், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் தெளிவும், நிதானமும் அவ
ளுக்கு வாய்த்திருந்தது. அற்ப விஷயங்களுக்கெல்லாம் அழுது, புலம்பும்
பெண்கள், (சில சமயம் ஆண்களும்கூட), மத்தியில் அவளது இந்த மனோ
திடம் ஆச்சரியமளிப்பதாயிருந்தது. சிலருக்கு அது கர்வமாக கூட தோன்றி
யிருக்கலாம். போதாதற்கு, தலைமைஆசிரியர், மாணவர்கள், பெற்றோர்
மத்தியில் அவளுக்கு நல்ல மதிப்பிருந்தது. அதை பொறுக்க முடியாத,
பொறாமைத் தீயின் வெளிப்பாடே, இந்த கேவலமான தாக்குதல். என்ன
தான் மனோதிடம் இருந்தாலும், ஒரு பலஹீனமான தருணத்தில்,பெண்
மையின் மென்மை வெளிப்படத்தான் செய்கிறது. `இந்த பேச்சுக்கெல்லாம்
மதிப்பு கொடுத்தால் நிறைய பேசுவார்கள். நாளை இதை விடவும் நல்ல
புடவையணிந்து போனால், தன்னால் வாயை மூடிக்கொள்வார்கள். அவர்க
ளிடம் உன் வேதனையை வெளிப் படுத்திக் கொள்ளாதே’ என ஏதேதோ
கூறி அவளை தேற்ற முயற்சித்தேன். மறுநாள்காலை, அவள் பள்ளி
செல்கிறாளா என அறிய போன் செய்தேன். `இதோ கிளம்பிட்டேன்’ என்ற
அவள் குரலில் பழைய தெளிவிருந்தது. எனக்கும் நிம்மதியாயிருந்தது.
+2 தேர்வுகள் நடந்து கொண்டிருந்த சமயம், அவள் பள்ளிதான், அங்கிருக்
கும் அனேக பள்ளிகளுக்கு தேர்வேழுதும் சென்ட்டராக திகழ்ந்தது. என்
இளையமகனும் அங்கேதான் தேர்வெழுத சென்றிருந்தான். தேர்வுக்கு முன்
ஒரு மாணவன், அவள் காலைத் தொட்டு வணங்கி விட்டு ஹாலுக்குள்
சென்றதாக, என் மகன் வந்து ஆச்சரியத்துடன் சொன்னான். இத்தகைய
அன்பும், பாராட்டும், பணியில் அவள் கொண்டிருக்கும் ஈடுபாடுமே, இந்த
மனோதிடத்தை அவளுக்கு தந்திருக்கும் என தோன்றியது. நிறைவாகவும்
இருந்தது.
.
Subscribe to:
Posts (Atom)