Monday, October 18, 2010

குலசை, தசரா திருவிழா

.
.மூன்று ச.கிமீ. பரப்பளவேக் கொண்ட சிறிய கடற்கரை கிராமம், இன்று

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடி தசராதிருவிழா இங்கு தான் பிர

பலம்.மைசூரைப் போல பிரம்மாண்டமோ. ஆடம்பரமோ கிடையாது.

இந்த திருவிழாவில் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்

வதாக கூறப்படுகிறது. குலசை என்று சுருக்கமாக அழைக்கப் படும் குல

சேகரப்பட்டிணம் முற்காலத்தில் பாண்டியர்களின் துறைமுகமாக திகழ்ந்

தது. தூத்துக்குடி முக்கிய துறைமுகமாக மாற்றப் பட்டபின்னர், இதன்

முக்கியத்துவம் குறைந்தாலும் 300ஆண்டுகள் பழமையான முத்தாரம்மன்

கோயில் அனைவரையும் ஈர்த்துள்ளது.


இந்த திருவிழாவின் முக்கிய அம்சம், பக்தர்கள் விதவிதமான மாறுவேட

மணிந்து, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவது தான். நவராத்திரி

தொடக்க நாளன்று, மாலையணிந்து, காப்பு கட்டி விரதம் தொடங்குவர்.

அவரவர் விருப்பத்திற்கேற்ப அம்மன், காளி, ராமர், சீதை, முருகன்,

ஹனுமன், கரடி என பலவிதமான வேடமணிந்து, வீடுவீடாக வந்து,

அம்மனுக்கு காணிக்கை வாங்கி கோயிலுக்கு செலுத்துவர். இந்த பத்து

நாட்களிலும், ``முத்தாரம்மனுக்கு காணிக்கை போடுங்க’’ எனும் குரல்களை

தினம் பலமுறை கேட்கலாம். கிறிஸ்டியன், முஸ்லீம் என அனைத்து

மதத்தவரும் இவர்களுக்கு காணிக்கை போடுவது ஆச்சர்யமான

விஷயம்.
ஞானமூர்த்தியாக சிவனும்,முத்தாரம்மனாக சக்தியும்

ஒன்றாக காட்சி அளிப்பது மற்றோரு சிறப்பம்சம்.








``வாராளே..., வாராளே.., முத்தாரம்மா ; நாங்க

வேஷம் கட்டும் அழக பாக்க ...

என்னும் பாடல் அழகான நாட்டுப்புற மெட்டில், நெல்லை, தூத்துக்குடி

மாவட்ட அனைத்துக் கிராமங்களிலும் ஒலிக்கக் கேட்கலாம்.. வேடம்

அணிந்த பக்தர்கள், காலை ஏழுமணியிலிருந்து, இரவு பதினொருமணி

வரையிலும் கூட வருகின்றனர். சிலர் குழுக்களாக சேர்ந்து மேளதாளத்

துடன் ஆடியபடி வருவர். வேடமணியும் பக்தர்களின் எண்ணிக்கை,

வருடாவருடம் அதிகரித்து வருகிறது.


எங்கள் வீட்டு வாசலுக்கு வந்த பக்தர்கள்

காளி






அம்மன்.




ஹனுமன்





லட்சகணக்கான மக்கள் கூடுவதால், இந்த சிறியகிராமம் திணறித்தான்

போகிறது. அங்குள்ள மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் கூறிய

விஷயம் இது. வேடமணியும் பக்தர்கள் உலோகத்தாலான சூலம், வேல்

கொண்டு வருவது தடை செய்யப் பட்டிருக்கிறது. ஆனாலும் தடையை

மீறி பலர் கொணர்வதால், கூட்டநெரிசலின் போது பலருக்கு குத்தி

கிழித்து காயம் ஏற்படுகிறது. அவர்களுக்கு தையல் போடுவது,ம் , கட்டு

போடுவதுமே எங்களுக்கு பிரதான வேலை என்றார்.


நேற்று முந்தினம், இப்படித்தான் கரடி வேடமணிந்து வந்த பக்தரின்

ஆடையில் ( கருப்பு நிற பாலிஸ்டர் துணியில் இழைஇழையாக தைத்து

இருக்கும் ) கூட வந்த அம்மன் வேடமணிந்தவரின் கையில் வைத்திருந்த

தீச்சட்டியில் இருந்து நெருப்பு பொறி பறந்து விழுந்து தீப்பிடித்து விட்டது.

உடலெல்லாம் பலத்த தீக்காயம். மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்

பட்டார். கூட்டமும் நெரிசலும் மிக அதிகமாக இருப்பதால், பாதுகாப்பு

விதிகள் இன்னமும் அதிகப் படுத்த வேண்டும்.


மொத்தத்தில் ஓர் அழகான நாட்டுப்புற திருவிழாவாக இதை ரசிக்கலாம்.

.

Tuesday, October 12, 2010

பிறப்பின் பிறழ்வு..., திருநங்கைகள்.

.

.
.

.நான் சிறுபெண்ணாக இருந்தபோது ஊரில் `கணியான் கூத்து’ என்றொரு

நிகழ்ச்சி நடக்கும். ஆண்கள், பெண்களாக வேடமிட்டு நடிக்கும் ஒருவகை

நடனநிகழ்ச்சி அது. கொஞ்சம் ஆண் சாயலோடு இருக்கும் பெண்களை,

`கணியான் மாதிரி இருக்கா’ என்று புறம் பேசுவது வழக்கமாயிருந்தது.

அப்போதெல்லாம் நிஜமாகவே அப்படி ஒரு பிரிவினர் இருப்பது தெரியாது.

கொஞ்சம் விவரம் தெரிந்த பின், அரவாணிகள் பற்றி தெரிய வந்தது.

அதுவும், சித்திரை மாதம் அவர்கள் நடத்தும் கூத்தாண்டவர் திருவிழா,

மிஸ்கூவாகம் பற்றிய பத்திரிகைசெய்திகள் வழியாய் புரிந்தது. அரவாணி

என்றழைக்க படும் இவர்கள், தங்களை மகாபாரத அரவாணின் மனைவி

யாக பாவித்து தாலி கட்டிக் கொள்வதும், மறுநாளே தாலியறுத்து ஒப்பாரி

வைப்பதும் செய்திகளாக வந்தன.



ஆனால் நிஜத்தில் இவர்கள் நிலையென்ன? பால்திரிபு காரணமாய் பெற்றோ

ராலும் மற்றோராலும் புறக்கணிக்கப்பட்டு், பிச்சையெடுப்பவர்களாகவும்,

பாலியல் தொழிலாளியாகவும் வாழும் நிலைக்குத் தள்ளப் படுகின்றார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் 1,50,000 திலிருந்து 2,00,000 அரவாணிகள் இருப்ப

தாக கணக்கெடுப்புகள் கூறுகின்றன. இந்தியாவின் முதல் HIV பாஸிட்டிவ்

ரிசல்ட், தமிழ்நாட்டில் இருப்பதாக அறிந்த பின்னர் தான், அரசாங்கம்

பாலியல் தொழிலாளிகள் பற்றியும், அரவாணிகளாக வாழ்பவர்கள் குறித்

தும் கவனம் கொள்ளத் தொடங்கியது. அவர்கள் தங்களைப் பற்றி சிந்திக்க,

பேச ஒரு தளம் அமைத்துக் கொடுக்கப் பட்டது.



திருநங்கையாக பிறந்து, விடாமுயற்சியாலும், உழைப்பாலும் உயர்ந்த

நர்த்தகி நடராஜ், சக்திபாஸ்கர், இவர்களுக்கு தஞ்சை ராமையாப் பிள்ளை

அவர்களின் மாணாக்கராகும் வாய்ப்பு கிடைத்தது. அபார கலைத்திறமை

யால் முன்னேறிய இவர்களில் நர்த்தகி தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தில்

நடனத்துறை விரிவுரையாளராக பணிபுரிந்தார். ஒரு பேட்டியில், இந்த

வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திராவிட்டால் நீங்கள் என்னாவாகியிருப்பீர்கள்

என்ற கேள்விக்கு, `மற்ற துர்பாக்யசாலிகளைப்போல நானும், மும்பை

யிலோ, அல்லது வேறு எங்காவதோ விபச்சாரத்துக்கு தள்ளப்பட்டிருப்பேன்

என்கிறார்.



தமிழ்நாடு அரவாணிகள் நல சங்கத்தின் தலைவாராகவும், SIDA எனும்

அமைப்புக்கு மேனேஜிங் ட்ரெஸ்டியாகவும் திகழும் பிரியாபாபு எனும்

மற்றொரு திருநங்கை, அரவாணிகளின் தற்போதைய நிலை தேவலாம்

என்கிறார். 15 வருட போராட்டங்களின் வெற்றியாக அவர் குறிப்பிடுவது,


அரவாணிகளை, `மற்றவர்கள்’ எனும் பிரிவின் கீழ் கொணர்ந்து, அவர்

களுக்கு ரேஷன்கார்டு, வோட்டர் ஐடி, ஓட்டுரிமை வழங்க சுப்ரீம்கோர்ட்

அணையிட்டது,

பால்மாற்று அறுவை சிகிச்சையை சட்டபூர்வமாக்கியது,

சுயவேலை வாய்ப்பு திட்டங்கள்,

பள்ளி, கல்லூரிகளில் பால்திரிபை காரணம் காட்டி அவர்களுக்கு அனுமதி

மறுக்கக் கூடாது போன்றவைகள்.







`சகோதரி பவுண்டேஷன்’ எனும் அமைப்பை நடத்தி வரும் கல்கி எனும்

மற்றொரு திருநங்கை ஜர்னலிசம் படித்தவர். பள்ளி,கல்லூரிகளில் விழிப்

புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இளம்வயதில், பள்ளி, கல்

லூரிகளில் அவமானப் படுத்தப்பட்டு, அதன் காரணமாக தன்னை திடமான

வராக, தைர்யசாலியாக வளர்த்துக் கொண்டவர். திருநங்கைகளுக்காக

முதல் திருமண தளம் ஒன்றை இணையத்தில் நிறுவியிருக்கிறார். சென்ற

வருடம் `வாழ்நாள் சாதனையாளர்’ விருது அரிமாசங்கத்தினரால்,

இவருக்கு வழங்கப் பட்டிருக்கிறது.


விவரம் புரியாவயதில் தனக்குள் நடக்கும் வினோதத்தை புரிந்து கொள்ள

முடியாமல், பெற்ற தாய் உட்பட அனைவரின் புறக்கணிப்புக்கும் ஆளாகும்

இவர்களுக்கு தேவை அரவணைப்பும், பாதுகாப்புமே. ஆனால் அதை இந்த

சமூகம் தருவதில்லை. மாறாக எள்ளி நகையாடுகிறது.


`ஆணாகி, பெண்ணாகி நின்றானவன்’ என்ற அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை

ஏற்றுக் கொண்ட நாடு இது. ஆனால், உயர்திணையில் பிறந்தும்,இவர்களை

அஃறிணையாகவே சமூகம் பார்க்கிறது. `பேடி‘, `அலி’ என எத்தனை

கேவலமான சொற்கள்.... முதலில் இந்த திரைப்படங்களில், எங்களை

கேவலமாகவும், நகைச்சுவையாகவும் சித்தரிப்பதை நிறுத்துங்கள்’ எனக்

குமுறுகிறார்கள். உண்மைதானே! அரவாணிகள் என்றாலே, பெண்புரோக்

கர்கள், பாலியல் தொழிலாளிகள் என்பதாகத்தானே சித்தரிக்கிறார்கள்.

டி.ராஜேந்தரின், ஒருதலைராகம் தொட்டு ( கூவாத கோழி கூவுற வேள)

அமீரின் பருத்திவீரன் ( ஊரோரம் புளிய மரம்) வரை இவர்கள் நகைச்

சுவை பாத்திரங்களாகத்தானே சித்தரிக்க பட்டிருக்கிறார்கள்..



அரசாங்கமும், அரசாணகளும் வெறும் புள்ளிகள் மட்டுமே வைத்திருக்

கின்றன. அதை அழகான கோலங்களாக்குவது சமூகம், மற்றும் பெற்ற

வர்களின் கையில் தான் இருக்கிறது.

.

Friday, October 8, 2010

`கொடரிப்பேர்’

.
.`கொடரிப்பேர்...., கொடரிப்பேர்...., குடைரிப்பேர் செய்பவனின் குரல்

உரக்க ஒலிக்கிறது. `ஏ கொடரிப்பேர்... இங்க வா...’ ஒரு குரல் அழைக்

கவும் நிற்கிறான். `இந்த பட்டனைக் கொஞ்சம் சரி பண்ணிக்குடு’. சாலை

யின் ஓர்ஓரத்தில் அமர்ந்து கொள்கிறான். பையிலிருக்கும் உபகரணங்களை

எடுத்து பட்டனை சரி செய்ய ஆரம்பிக்கிறான். அதற்குள் `இந்த கம்பியக்

கொஞ்சம் சரிபண்ணித் தா..., இதோ நடுவுல கொஞ்சம் கிழிஞ்சிருக்குப்

பாரு’ அடுத்தடுத்து குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.



ஒவ்வொன்றாய் சரிசெய்து கொண்டே, இருட்டிக் கொண்டுவரும் வானத்தை

யும் அவ்வப்போது பார்த்துக் கொள்கிறான். கையிலிருக்கும் வேலை முடிவ

தற்கும், மழை பெருந்தூறலாய் விழுவதற்கும் சரியாயிருந்தது. உடமை

களை அவசரவசரமாய் பொறுக்கி கிழிந்ததுணிப் பையினுள்ப் போட்டு,

இடதுதோளில் தொங்க விட்டுக் கொண்டான். நான்கைந்து உடைந்துபோன

குடைகளை வலதுகக்கத்தில் இடுக்கிக் கொண்டு வேகமாய் நடக்க ஆரம்

பித்தான். `கொடரிப்பேர்... என்ற குரல் மழையில் கரைந்து போகிறது.

.