Showing posts with label தற்கொலை. Show all posts
Showing posts with label தற்கொலை. Show all posts

Friday, May 7, 2010

விட்டுக்கொடுத்தலும், அனுசரித்துப்போதலும்... எதுவரை...?

.
.
இரண்டு நாட்களுக்கு முன், தெருவில் ஒரு துக்ககரமான நிகழ்வு. எதிர்

வீட்டுப்பெண், திருமணமாகி இரண்டரை வருடங்களே ஆகியிருந்த நிலை

யில், தன் ஒன்றரை வயது பெண்குழந்தையை தவிக்கவிட்டு விட்டு தற்

கொலை செய்து கொண்டாள். திருமணமாகி, தன் கணவனுடன் திருப்

பூருக்கு வாழச் சென்றவள், வாழ்க்கையையே முடித்து கொண்ட செய்தி

போன் மூலம் வந்திருக்கிறது.



குடிகார கணவன் கொடுமைப்படுத்தினான் என்பதற்காக, அப்பகுதியில்

கிடைக்கும் சாணிபவுடர் என்பதனை உட்கொண்டு தற்கொலை செய்து

கொண்டிருக்கிறாள். ஒழுங்காக வேலைக்கு செல்வதில்லையாம், வெளியே

யாருடனும் பேசவோ பழகவோ விடுவதில்லையாம், குடித்துவிட்டுஅடிப்பது

கருப்பு என்பதை காரணம் காட்டி வேறு கல்யாணம் செய்து கொள்வேன்

என்ற மிரட்டல் வேறு. இவையெல்லாம் ஆறு மாதத்திற்கு முன் தாய்வீடு

வந்தவள் கூறிய காரணங்கள். போகமாட்டேன் என்று அழுதவளை சமா

தானப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள்.



எம்பெண்கள் முன்னேறுகிறார்கள் என சந்தோஷமாக நினைக்கும் நேரம்,

இதைப்போன்ற கோழைத்தனமான நிகழ்வுகள், அதிர்ச்சியையும், ஆயாசத்

தையும் தருகின்றன. இத்தகைய நிகழ்வுகளில் பெற்றோருக்கும் பெரும்

பங்கு இருக்கின்றது. குழந்தைகளுக்கு தைரியத்தையும், போராடும் குணத்

தையும் பெற்றோர் தான் உருவாக்கித் தரவேண்டும். தொட்டாற்சுருங்கியாக

சாதுவாக இருப்பதுவும் கூட தவறுதான். அந்த பெண்ணும் அத்தகையவள்

தான். சதா சிரித்த முகமாக மிகவும் அமைதியாக இருப்பாள். அதிர்ந்து

கூட பேச மாட்டாள். திருமணம் செய்து கொடுப்பதோடு கடமை முடிந்து

விடுவதில்லை. கட்டியகணவனும், வாய்த்தவாழ்க்கையும் சரியில்லையா,

`உனக்கு எல்லாமுமாக நாங்கள் இருக்கிறோம்’ எனும் தைரியத்தை

பெற்றோரும், உடன் பிறந்தோரும் கண்டிப்பாக தரவேண்டும். இத்துணைக்

கும், அந்தபெண் +2 படித்துவிட்டு, ஒரு தனியார் மருத்துவமனையில்

மூன்றுவருடம் நர்சாக பணியாற்றிய அனுபவம் கொண்டவள். கணவனைப்

பிரிந்து வந்தாலும், நிச்சயம் அவள் சொந்த காலில் நின்றிருக்க முடியும்.



விட்டுக் கொடுத்துப் போ..., அனுசரித்துப் போ... என்று அனுப்பி வைக்க

கிறார்கள். அது நம் ஜீன்களிலேயே இருக்கிறது. வாழ்வதற்காக விட்டுக்

கொடுக்கலாம். அதில் தவறே இல்லை. ஆனால் விலைமதிக்க முடியாத

உயிரையே விட்டு தர வேண்டியதில்லை.
.
.