Showing posts with label பகிர்வு.. Show all posts
Showing posts with label பகிர்வு.. Show all posts

Friday, July 9, 2010

விருதுகள் - அன்பை பகிர்ந்து கொள்ளுதல்.

.
.

.
.
சகோதரி சந்தனமுல்லை `தங்கமகன்’ விருது தந்திருக்கிறார். விருது

பெறுதல் என்பது மிக சந்தோஷமான விஷயம்; எந்த வயதாக இருந்

தாலும். இந்த சந்தோஷத்தை என் வலையுலக உறவுகளோடு பகிர்ந்து

கொள்வது கூடுதல் சந்தோஷம்.


அமுதா.

தீபா.

கண்ணகி.

செ. சரவணக்குமார்.

ராகவன்.


வலையுலகை பொறுத்தமட்டில் இவர்கள் அனைவரும் என்னைவிட

அனுபவம் மிக்கவர்கள் தாம். இருப்பினும் அன்பை பகிர்ந்து கொள்ள

தடையில்லையே. விருது தந்த முல்லைக்கு நன்றிகள்.

விருது பெறுபவர்களுக்கு வாழ்த்துக்கள்.
.
.

Monday, January 25, 2010

முதல், முதலாக...

வலைப் பக்கங்களில் நான் எழுதிய`அழகம்மா’என்ற சொற்சித்திரம்,
24.01.10அன்றுவெளியான தீக்கதிர் இதழின் ஞாயிறு இணைப்பான
வண்ணக்கதிர் இதழில் வெளியாகியுள்ளது. என் எழுத்துக்கள் முதன்
முறையாக அச்சேறி உள்ளது. இச்சிறு வெற்றியை உங்களுடன்
பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். இதற்கு உறுதுணையாக
இருந்த திரு எஸ்.வி.வேணுகோபாலன் அவர்களுக்கும், தீக்கதிர்
அசிரியருக்கும் என் நன்றியும், வந்தனமும்.


விடுமுறை...


அப்பாடா,

நாளை விடுமுறை.

நிம்மதியா ஓய்வு எடுக்கலாம்;

உனக்கென்ன

தினமும் விடுமுறைதான்,

கேலியாக கணவன்;

வருடமுழுவதும்

ஆன் ட்யூட்டி தான்,

விடுமுறை நாட்கள்,

ஓவர் டைம் தான்;

மெளனமாய் புன்னகைக்கும்

மனைவி...