Friday, April 30, 2010

பொருந்தா திருமணம்; பொறுமையான வாழ்வு

.
.
சிறு வயதில் நாங்கள் இருந்த வீட்டுக்கு எதிர்வீட்டில் இருந்தாள், அவள்.

அதிக நெருக்கமில்லாவிடினும், என் விளையாட்டு தோழி அவள். ஆறு

பெண்கள், நான்கு பையன்கள் என பெரிய குடும்பம் அவர்களுடையது.

ஓரளவு வசதி படைத்தவர்கள் தான், இருந்தும் யாரையும் படிக்கவைக்க

வில்லை. அவளது மூன்று அக்காள்களுக்கு ஏற்கனவே திருமணமாகி

இருந்தது.



அவள் பின் வீட்டு தோழி அவளிடம், அவள் சித்தப்பா ஊரிலிருந்து வந்தி

ருப்பதாகவும், அவருக்கு பெண்பார்த்து கொண்டிருப்பதாகவும் கூறியபோது

உங்கசித்தப்பா ரொம்ப வயசானவரா தெரியுறாரே, அவருக்கு எப்படி பெண்

கிடைக்கும் என கேலி செய்திருக்கிறாள். பாவம். அவள் விதியை அவள்

அறிந்திருக்கவில்லை. அவளது வீட்டில், அந்த தோழியின் சித்தப்பாவுக்கே

திருமணம் பேசி முடிவு செய்து விட்டனர். சில சமயம் உண்மை,

கற்பனையை விட மோசமானதாக அமைந்து விடுகிறது. அவருக்கு 32

வயது. அவளுக்கு 17 வயது தான். அவர் சென்னையில் ஏதோ கடை

வைத்திருப்பதாக சொன்னார்கள். திருமணம் முடிந்து அவள் சென்னை

போய்விட்டாள்.



நான் சென்னையில் அண்ணன் வீட்டிலிருந்த போது, அம்மாவும் நானும்

அவளை மார்கெட்டில் சந்தித்தோம். வீட்டுக்கு வரும்படி அழைத்ததால்

வீட்டுக்கும் போயிருந்தோம். திரும்பி வரும் போது அம்மா,` பாவம்

அவள். ஏதோ பிரச்சனை போலிருக்கிறது. அவள் முகமே சரியில்லை’

என்றார்கள். சில வருடங்கள் கழித்து ஊரில் கோயிலில் அவளை பார்த்த

போது அதிர்ந்து விட்டேன். கழுத்து முகமெல்லாம் தழும்புகள், தீக்காயங்

கள். என்னவாயிற்று என்றபோது கண்கலங்க நின்றாள், பேச முடியாமல்.

பக்கத்துவீட்டு அக்கா என் கையை அழுத்தி பேசாமலிருக்கும் படி சைகை

செய்யவும் அமைதியாகி விட்டேன். பக்கத்தில், அவள் கையை பிடித்தபடி

சிறுபெண், ஏழெட்டு வயதிருக்கும், மாநிறமாக, நல்ல களையாக, சுருள்

சுருளான முடியுடன், அவள் பெண் தான், பாவமாக நின்றிருந்தது. உடன்

வந்த அக்கா கூறினார்கள், அவள் கணவன் மிகவும் சந்தேக பேர்வழியாம்.

கடைக்கு போகும் போது அவளை வீட்டினுள் வைத்து பூட்டி விட்டு தான்

போவாராம். திடீர் திடீரென திரும்பி வருவாராம். கஷ்டம் தாங்க முடியா

மல் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து இருக்கிறாள். சில மாதங்கள்

சிகிச்சைக்கு பின் ஊர் வந்திருக்கிறாள். இப்பவும் வீட்டில், இவளுக்கு

`நல்லபுத்தி ...?’ சொல்லி கணவன் வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்

போகிறார்களாம். சில நாட்கள் அவள் நினைவாகவே இருந்தது.



பல வருடங்கள் இடைவெளிக்கு பின், சமீபத்தில், அவளை ஒரு திருமண

வீட்டில் சந்தித்தேன். ஒரு சுற்று இல்லை பல சுற்று, அடையாளமே தெரி

யாமல் குண்டாகி இருந்தாள். கையில் ஒரு பெண்குழந்தை, அவளது

பேத்தியாம். நல்ல கலகலப்பாக பேசினாள். கழுத்தில், முகத்தில் அந்த

தீக்காய தழும்புகள் இன்னும் மாறாமலிருந்தன. வெளியே தெரியாமல்,

இதைப் போல் எத்தனை தழும்புகளோ, மாறாத வடுக்களாய் மனதில்...

அவள் மட்டுமே அறிவாள்.
.
.

Tuesday, April 27, 2010

சொத்து விற்றலும், சிரட்டை மிட்டாயும்...

.
`பத்திரமா உள்ள வை’

மனைவியிடம் நீட்டினான், மஞ்சள் பையை,

பத்திர ஆபீஸ் போய் வந்த கணவன்.


இந்தாடா..., இனிப்பு உனக்கு,

வாங்கியவர், வாங்கி தந்தது மகனுக்கு.


`போப்பா, இப்பவும் சிரட்டை மிட்டாயா?

அடுத்த தடவையாவது ஜாங்கிரி வாங்கியா..

சலித்து கொள்கிறான் மகன்.


ஆமா... இனும என்ன இருக்கு குடுக்க...

உனக்கு ஜாங்கிரி கொண்டார;

அழுது புலம்புகிறாள் அம்மாக்காரி.
.
.

Thursday, April 22, 2010

தமிழில் பெயர் பலகை.

.
.
கடைகளுக்கான பெயர்பலகைகள் தமிழில் எழுத பட்டிருக்க வேண்டும்

என்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அரசு அறிவித்தி

ருக்கிறது. நானறிந்த வரையில் நிறைய அழகுநிலையங்கள்

ஆங்கில பெயர்களில் தான் இருக்கின்றன. அதனால் ஆங்கிலம்

அல்லாத, அழகான பெயராக வைக்கலாமே என்று நினைத்தேன்.

என் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் போது இந்த ஞானோ

தயம் ஏற்படவில்லையே என்பதை அடிக்கடி வருத்தத்துடன் நினைப்பேன்.




`சாமுத்ரிகா பெண்கள் அழகுநிலையம்’ என அழகானபெயர்

(காரண பெயர்..?) வைத்தேன். பார்லருக்கு வருபவர்கள் என்னிடம் கேட்ட

கேள்வி, `உங்க பேரு சாமுத்ரிகா வா க்கா.?’. ` இல்ல அது எங்க அக்கா’

நுனிநாக்கு வரை வந்த பதிலை அடக்கி விட்டு, சாமுத்ரிகாலட்சணம் பற்றி

விளக்கினேன். சிலர், `சாமுத்ரிகா னா உங்க மகளா.?’ என்று இல்லாத

பெண்ணுக்கு பெயர் சூட்டினார்கள். மீண்டும் கோனார் விளக்கவுரை, பெயர்

காரணம். ஒரு பெண், `எதுக்கு போத்தீஸின் சாமுத்ரிகா பட்டு பெயரை

கடைக்கு வச்சிருக்கீங்க.?’ என்றாள் மகா புத்திசாலியாய். `அதுவா.. ப்ளீச்

பேஷியல் பண்ணிக் கொண்டால், ஒரு சாமுத்ரிகா பட்டு ஃப்ரீ தருவேன்’

என்றேன். அவள் சிறு ஐயத்துடன், என் முகம் பார்த்து , புரிந்தவளாய்.

`போங்கக்கா’ என்றாள். ஒரே ஒரு பெண் மட்டும், ` அழகான பெயர் வச்

சிருக்கீங்க மேடம்’ என்ற போது நிஜமாகவே சந்தோஷமாக இருந்தது.

அவளே தொடர்ந்து,` அம்மா தான் விளக்கம் சொன்னாங்க’ என்றாள்.



இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப் பட்டதல்ல. உண்மை

யிலேயே நம், இளைய தலைமுறையினரிடம் தமிழறிவு எந்த அளவில்

இருக்கிறது என்பதை வருத்தத்துடன் நினைவுகூர வேண்டியிருக்கிறது.

ஆனால், இப்போதெல்லாம் ஏதாவது கேட்க போன் செய்வோர், `இது

சாமுத்ரிகா அழகு நிலையம் தானே’ என்று அழகாக கேட்கிறார்கள்.

ஒரு சின்ன சந்தோஷம், மனதில் பூ பூத்தாற்போல்...
.
.

Sunday, April 18, 2010

பெண்கள் வேலைக்கு செல்வது கேவலமா..?

.

இன்று பெண்கள் கால் பதிக்காத துறையே இல்லையெனலாம். ஆகாயத்

தில் பறப்பதாகட்டும், ஆபீஸ் நிர்வாகமாகட்டும், அரசியலாகட்டும், எதி

லும் சாதிக்கின்றனர். `அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதற்கு’ என்ற கால

மெல்லாம் மலையேறி விட்டது.எத்தனையோ மாற்றங்கள், வியத்தகு

முன்னேற்றங்கள்... சந்தோஷமாயிருக்கிறது.




ஆனால், பெண்கள் வேலைக்கு செல்வதைக் கேவலமாக கருதும் சிலர்

இன்னமும் இருக்கின்றனர் என்பது வருத்தம் தரும் உண்மை. எனக்கு

தெரிந்த பெண், பொறியியற் கல்லூரியில் விரிவுரையாளராக பணி புரி

பவர், நானும் அவரும் பேசிக்கொண்டிருந்தோம். அங்கு வந்த ஒரு

பெண்மணி, விரிவுரையாளருக்கு தெரிந்தவர் போலும், அந்த பெண்மணி

யிடம் அவரது மகளின் படிப்பு குறித்து விசாரித்தார். அவர் பெருமையாக

மகள், சென்னையில் பொறியியற்கல்லூரியில் இறுதியாண்டு படிப்பதாக

கூறினார். இவர் `ப்ளேஸ்மென்ட் ’ பற்றி கேட்டார். அந்த பெண்மணி

கர்வத்தோடு, `சேச்சே, நான் வேலைக்கு அனுப்புறதுக்காக படிக்க வைக்க

வில்லை. எங்களுக்கு தேவையும் இல்லை’ எனவும், இவருக்கு கோபம்

வந்துவிட்டது. வேலைக்கு அனுப்பலேன்னா, ஏன் ப்ரபஷனல் கோர்ஸ்

படிக்க வைக்கிறீங்க.? சும்மா டிகிரி ஏதாவது படிக்க வைக்கவேண்டியது

தானே’ பொரிந்து தள்ளினார். அந்தம்மா போய்விடவும், நான் இவரிடம்

`ஏதோ படிக்கவாவது வைக்கிறாங்களே, அதை சொல்லுங்கள்’ என்றேன்.

ஆனால் அவர் கூறிய பதில் சிந்திக்க வைத்தது.




இப்படித்தான் சிலர், 100% வேலை வாய்ப்பு தரும், டாப் டென் எனும்

முண்ணனி கல்லூரிகளில் சேர்கின்றனர். ஆனால் படிப்பை பாதியில்விட்டு

விட்டு திருமணம் செய்து கொள்கின்றனர். அல்லது வேலைக்கு போகா

மலிருந்து விடுகின்றர். இதனால் வேலைக்கு போகவேண்டிய கட்டாயத்

தில் இருக்கும், இந்த கல்லூரியில் படிக்க விழையும் மற்ற மாணவர்க

ளின் வாய்ப்புகளை இவர்கள் வீணாக்குகிறார்கள். இது கிராமங்களில்

தான் என்றில்லை, நகர்புறங்களிலும் தொடர்கிறது. என்மகன் சென்னை

யில் M.C.A படிக்கும் போது, உடன் படித்த மாணவிகளில் ஏழு பேர்,

படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு திருமண செய்து கொண்டனராம்.

வேலை, திருமணம் என்பதெல்லாம் அவரவர் சொந்த விஷயம் என்றா

லும் மற்றவர்களுக்கான வாய்ப்பு கெடுவது அவர்களுக்கு புரிவதில்லை.

ஆனால், இப்படி படிப்பை பாதியில் கைவிடும் பெண்கள், தங்கள்

குழந்தைகளுக்கு இந்த தவறை செய்ய மாட்டார்கள் என நிச்சயம்

.நம்பலாம்..

.

Thursday, April 15, 2010

முரண்கள்.

.

கர்ப்பப் பை `வீக்காயிருக்கு’

`பெட்ரெஸ்ட்’ எடுக்கணும்.

அறிவுரையேற்று,

பத்துமாதமும் படுக்கையிலே

தவமிருந்தும்,

பலஹீனமாய் பிறந்த குழந்தை

பாவமாய் தூங்குவது

`இன்க்குபேட்டரில்’.




சும்மாடு தலையில் கட்டி

செங்கல் சுமக்கும்

சித்தாள் அஞ்சலைக்கு

அழகாய் பிறந்த குழந்தை

அழுக்கு துணியில், அம்மா மடியில்

சிரிக்குது தூக்கத்தில்.

.

Sunday, April 11, 2010

பதின்ம தோழி.

என் பதின்ம தோழி அவள். ஆறாம் வகுப்பிலிருந்து, பள்ளியிறுதி வரை

ஒன்றாகவே படித்தோம். படிப்பு, விளையாட்டு, ஆட்டம், பாட்டம் என

அனைத்திலும் ஒன்றாகவே பங்கேற்போம். எங்கள் ரசனைகள் ஒத்தி

ருந்ததால், படித்த கதைபுத்தகங்கள், பிடித்த பாடல்கள் என அனைத்தும்

பகிர்ந்து கொள்வோம். கல்லூரிப் படிப்பை வேறு வேறு கல்லூரிகளில்

தொடர்ந்ததால் நாங்கள் பிரிந்தோம். நான் இளங்கலை படிப்புடன் முற்று

புள்ளி வைத்து விட, அவள் முதுகலை முடித்து, பக்கத்து ஊரில் ஒரு

பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்தாள். பக்கத்து ஊர் தான் என்ற போதும்

அவளை சந்திக்க முடியவில்லை. அப்போது போன் போன்ற தொடர்பு

சாதனங்களும் மிகக் குறைவு என்பதால், எங்களுக்குள் ஒரு இடைவெளி

ஏற்பட்டிருந்தது. எனக்கு திருமணமாகி, இரு பையன்களும் பிறந்து விட,

அவளுக்கு மிக தாமதமாகத் தான் திருமணம் ஆயிற்று. ஏதோ காரணம்,

அவள் திருமணத்துக்குக் கூட செல்ல முடியவில்லை.




ஒருநாள் நான் கேள்விபட்ட அந்த அதிர்ச்சியான செய்தியை என்னால்

நம்பவே முடியவில்லை. என் தோழியின் கணவர், இருதயநோய் காரண

மாக மரணமடைந்து விட்டார் என்றறிந்த போது, மணமாகி ஒன்றறை

ஆண்டுகளே கடந்திருந்த நிலையில், கையில் இரண்டே மாதம் நிரம்பிய

ஆண்குழந்தையோடு, அவளுக்கு வாழ்க்கையே முடிந்து விட்டிருந்தது.

அப்போது அவளுக்கு முப்பது வயது தானிருக்கும். அவளை சந்திக்க

அவா இருந்தாலும், வாய்ப்பு கூடவே இல்லை.




ஏழெட்டு வருடங்கள் கழிந்திருக்கும், அந்த வேளையும் தானே அமைந்தது.

வாக்காளர் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி, எங்கள்

தெருமுனையில் இருந்த பள்ளியில் நடைபெற்றது. நீண்ட வரிசையில்,

ஆண்களும், பெண்களுமாய், நிறைய பேர் காத்திருந்தனர். அங்கு வந்த

கல்லூரிவிரிவுரையாளர் ஒருவர், கொஞ்சம் செல்வாக்கு உள்ளவர், தம்

அருமை மனைவியை அங்கிருந்த இருக்கையில் அமர செய்து விட்டு,

கையெழுத்திடப் பட வேண்டிய ரிஜிஸ்டர் முதலியவற்றை அந்தம்மா இருக்

கும் இடத்திற்கு தூக்கி சென்று கையெழுத்து வாங்க முயன்றார். வரிசை

யில் காத்திருந்த பலரும் ஆட்சேபம் தெரிவித்து கூக்குரல் எழுப்பவும்,

பணி பாதியில் நிறுத்தப்பட்டது. அதிகாரியுடன் விவாதித்துக் கொண்டிருந்த

பெண்குரல் பரிச்சயமானது போலிருக்க, யாரெனப் பார்த்தேன். அவள்தான்

என் பால்ய தோழியேதான். என் கையை அன்புடன் பற்றி, ஆர்வத்துடன்

பேசிய அவளது வெறுமைக் கோலம், அடிவயிற்றை ஏதோ செய்தது.

வீடு அருகிலிருந்ததால் அழைத்து வந்தேன். நீண்ட இடைவெளியை இட்டு

நிரப்பும் அளவுக்கு நிறைய பேசினோம். அவள் மகன் நான்காவது படிப்ப

தாக கூறினாள். போனில் அடிக்கடி பேசிக்கொள்வோம். அவள், அம்மாவு

டன் பக்கத்து ஊரில் இருப்பதையும், பக்கத்து ஊர் பள்ளியில் +2 க்கு ஆசிரி

யையாயிருப்பதையும் அறிந்து கொண்டேன். ஒருநாள் பேசும் போது, அவ

ளது தோற்றம் கூறித்து கேட்டேன். `இப்போது தான் பொட்டு, பூ எல்லாம்

வைத்து கொள்கிறார்களே, நீயும் கொஞ்சம் சாதாரணமாயிருக்கலாமே’

என்றேன். அவள் சார்ந்த சமூகத்தில் மிகவும் கட்டுபாடுகள் உண்டு எனவும்

அவளுக்கு அதிலெல்லாம் பெரிய ஈடுபாடு இல்லை என்றும் கூறினாள்.

அதுவும் உண்மைதான். பள்ளிநாட்களிலேயே, ஏதாவது ஸ்பெஷல்க்ளாஸை

சாக்கிட்டு நாங்களெல்லாம் கலர்கலராய் வரும்போது கூட அவள் சாதாரண

மாயிருப்பாள். அவளது வேலை, இப்போதைய மாணவர்கள், பழையதோழி,

கள் என நிறைய பேசுவோம்.





ஒரு சோம்பேறிதனமான மதியம், மூன்று மணியிருக்கும், அவளிடமிருந்து

போன். எதுவும் பேசாமல் அவள் அழும் குரல் கேட்கவும் பதட்டமானேன்.

என்ன நடந்தது என்ற என் கேள்விக்கு பதில் கூறாமல், அழவும் நான் அவச

ரமாய் அவள் வீடு சென்றேன். அழுகையினூடே அவள் கூறியது, ஆத்திரத்

தையும், வருத்தத்தையும் தந்தது. முன்தினம், அவள் அண்ணன் வாங்கிக்

கொடுத்திருந்த காட்டன் புடவை, சரிகையெல்லாம் போட்டு அழகாய் இருந்

திருக்கிறது, கட்டி சென்றிருக்கிறாள். மறுநாள், அதாவது இன்று, ஸ்டாப்

ரூமில் வைத்து சக ஆசிரியை, இவள் கட்டியிருந்த புடவை போல் வாங்கி

தரும் படி கணவனிடம் கேட்டதாகவும், அதற்கு அவள் கணவன், இப்படி

ட்ரெஸ் பண்ணிட்டு வர்றது மட்டும் தான் அவங்களுக்கு கிடைச்ச சந்தோ

ஷம், உனக்கு அப்படியா என்றும், இன்னும் அசிங்கமாக ஏதேதோ கூறி

யிருக்கிறார். அதை கொஞ்சம் கூட லஜ்ஜையின்றி, அந்த ஆசிரியை கூறி

சிரித்திருக்கிறாள், அதுவும் இவள் காது படவே. இதைக் கேட்டு கூசிப்

போன என் தோழி அரை நாள் விடுப்பு கொடுத்துவிட்டு வீடு வந்து எனக்கு

போன் செய்திருக்கிறாள். `இப்படியெல்லாம் பேச்சு கேட்க வேண்டியிருக்

கும் என்பதினால் தான் பழைய காலத்தில் `உடன்கட்டை’ ஏறியிருப்பார்

கள் போல’ என்று அவள் அழுத போது எனக்கும் தாங்க முடியவில்லை.




ஒரு நாளேனும், அவள் பேச்சில் சுயபச்சாதாபம் தொனித்திருந்ததில்லை.

வாழ்வு குறித்த அவநம்பிக்கை இருந்ததில்லை. இதுதான் வாழ்வு என்றான

பின், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் தெளிவும், நிதானமும் அவ

ளுக்கு வாய்த்திருந்தது. அற்ப விஷயங்களுக்கெல்லாம் அழுது, புலம்பும்

பெண்கள், (சில சமயம் ஆண்களும்கூட), மத்தியில் அவளது இந்த மனோ

திடம் ஆச்சரியமளிப்பதாயிருந்தது. சிலருக்கு அது கர்வமாக கூட தோன்றி

யிருக்கலாம். போதாதற்கு, தலைமைஆசிரியர், மாணவர்கள், பெற்றோர்

மத்தியில் அவளுக்கு நல்ல மதிப்பிருந்தது. அதை பொறுக்க முடியாத,

பொறாமைத் தீயின் வெளிப்பாடே, இந்த கேவலமான தாக்குதல். என்ன

தான் மனோதிடம் இருந்தாலும், ஒரு பலஹீனமான தருணத்தில்,பெண்

மையின் மென்மை வெளிப்படத்தான் செய்கிறது. `இந்த பேச்சுக்கெல்லாம்

மதிப்பு கொடுத்தால் நிறைய பேசுவார்கள். நாளை இதை விடவும் நல்ல

புடவையணிந்து போனால், தன்னால் வாயை மூடிக்கொள்வார்கள். அவர்க

ளிடம் உன் வேதனையை வெளிப் படுத்திக் கொள்ளாதே’ என ஏதேதோ

கூறி அவளை தேற்ற முயற்சித்தேன். மறுநாள்காலை, அவள் பள்ளி

செல்கிறாளா என அறிய போன் செய்தேன். `இதோ கிளம்பிட்டேன்’ என்ற

அவள் குரலில் பழைய தெளிவிருந்தது. எனக்கும் நிம்மதியாயிருந்தது.



+2 தேர்வுகள் நடந்து கொண்டிருந்த சமயம், அவள் பள்ளிதான், அங்கிருக்

கும் அனேக பள்ளிகளுக்கு தேர்வேழுதும் சென்ட்டராக திகழ்ந்தது. என்

இளையமகனும் அங்கேதான் தேர்வெழுத சென்றிருந்தான். தேர்வுக்கு முன்

ஒரு மாணவன், அவள் காலைத் தொட்டு வணங்கி விட்டு ஹாலுக்குள்

சென்றதாக, என் மகன் வந்து ஆச்சரியத்துடன் சொன்னான். இத்தகைய

அன்பும், பாராட்டும், பணியில் அவள் கொண்டிருக்கும் ஈடுபாடுமே, இந்த

மனோதிடத்தை அவளுக்கு தந்திருக்கும் என தோன்றியது. நிறைவாகவும்

இருந்தது.

.

Thursday, April 8, 2010

சுயநலமென்னும் குறுகிய வட்டத்தினுள்...

சுற்றி சுழன்றடிக்கும் சூறாவளியோ....

ஊய்ய்ய்ங்கென ஊளையிடும் ஊழிப்பெருங் காற்றோ...

திடீரென ஆடும் கோரத் தாண்டவம்;

வாயுதேவனுக்கு யார்மீது என்ன கோபமோ...

மண்ணை வாரி தூற்றுகிறான்; அனைவரையும் சபித்தபடி...

கண்ணுக்கு புலப்படாவிடினும்

புலன்கள் உணர்ந்தன புழுதியின் வாசத்தை.



பட்டென தடைபட்டது மின்சாரம்.

நிச்சயமாய் தெரிந்தது, திரும்ப வராதென;

இரவு எப்படி தூங்க போகிறோம்...

காயப்போட்ட துணிகள் என்னாயிற்றோ...

அடுக்கடுக்காய் முளைத்தன கவலைகள்.



வீட்டின் முன் போடப்பட்ட ப்ளாஸ்டிக் கூரைகள்

படபடத்தன பயங்கர சத்தத்துடன்...

பிய்த்து கொண்டு பறந்து விடும் போலிருந்தது.

ஓட்டுவீட்டிலும், கூரைவீட்டிலும் இருப்பவர்கள்

என்ன செய்வார்கள்... பாவம்.

சுயநலமென்னும் குறுகிய வட்டத்துக்குள் இருந்ததை

அவமானமாய் உணர முடிந்தது,



ஒருநொடிதான்;

வட்டத்தினின்று வெளிவர முடியாதபடி உள்ளிழுத்தது

ஊறவைத்த உளுந்தும், அரிசியும்...


* * * * * * * * * * * * * * * * * * * *


நான் எழுதிய `நட்சத்திரங்களும், நாமும்.' என்ற சொற்சித்திரம், சென்ற

ஞாயிறு வண்ணகதிரில் வெளியாகியுள்ளது. இந்த சந்தோஷத்தை

உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

.

Sunday, April 4, 2010

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...!

எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலை இங்கே உங்களோடு பகிர்ந்து

கொள்கிறேன்.



How Different Countries Debate In Parliments/Congress



TURKEY




MEXICO





SOUTH KOREA





UKRAINE






RUSSIA






ITALY









TAIWAN






INDIA






JAPAN





See what happens during political meetings in People's Republic of China ...


Peaceful,

Harmonious

and

No disturbance.






இந்த படங்களை பார்க்கும் போது ந்மக்கு இரண்டு விஷயங்கள் தெளிவாக

புரிகின்றன.

1. `பார்லிமெண்ட்டுக்கு பர்லிமெண்ட் அடிதடி’ ( புதுமொழி )

2. உலகளவில் நம் இந்திய பெண்களே வீரம் செறிந்தவர்கள்.