Monday, September 27, 2010

மாறிவரும் கிராமங்கள்....

.

.நகரத்து நாகரீகத்தின் கைகள், கிராமங்களை நோக்கி நீண்டு கொண்டிருக்

கின்றன. கண்கூடாக பார்க்க முடிகிறது மாற்றங்களை.



பெண்கள், பாவாடை தாவாணியிலிருந்து சுடிதார்க்கு மாறி விட்டனர்.

ஜீன்ஸ் அணியும் பெண்களைக் கூட பார்க்க முடிகிறது. நைட்டிக்கு மேலே

துண்டு போட்டுக் கொண்டு, குழாயடிக்கும், பக்கத்து கடைகளுக்கும் வரும்

பெண்களை காணமுடிகிறது. பெண்கள் சுதந்திரமாக ஷாப்பிங், லைப்ரரி

எல்லாம் சென்று வருகின்றனர்.


பசும்பால் வாங்க மாடு இருக்கும் வீடுகளை தேடிய காலங்கள் போய்,

பால்பாக்கெட்டுகளும், தயிர்பாக்கெட்டுகளும் கடைகளை ஆக்ரமித்துக்

கொண்டுவிட்டன. பசும்பால் கிடைப்பது இங்கும் அரிதாகி வருகின்றது.

விருந்தினர் வந்தால், யார் வீட்டில் நாட்டுக்கோழி கிடைக்கும் என்று

அலைந்த காலங்கள் மாறி, 24 மணி நேரமும் `பிராய்லர் சிக்கன்’

கிடைக்கிறது. அனைத்து மாவு வகைகளும் ரெடிமேடாக பாக்கட்டுகளில்

கிடைக்கின்றன.


அவ்வப்போது கேட்கும் பஸ்ஹாரன்கள் நிரந்தரமாக ஒலிக்கின்றது.

டிஜிட்டல் ஸ்டுடியோக்கள், கம்ப்யூட்டர் சென்ட்டர்கள், ஏடிஎம் வங்கிகள்,

என அத்தனை வசதிகளும் வந்துவிட்டன.


தெருக்கள் ஏழுமணிக்கே அரவமற்று அடங்க ஆரம்பித்து விட்டன.

முன்பெல்லாம் யார் வீட்டுக்காவது விருந்தினர் வந்தால், உடனே

தெரு முழுக்கதெரிந்து விடும். இப்போது, அனைவரையும் டிவி

சீரியல்கள் இழுத்து பிடித்துக் கொண்டு விட்டன.


போன மாதம், மதியம் பதினோரு மணியளவில், வீடுபுகுந்து, தனியாக

இருந்த 75 வயது மூதாட்டியை அடித்துக் கொன்று, அணிந்திருந்த இரண்

டரை பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இத்தனைக்

கும் நல்ல ஜனநடமாட்டம் மிகுந்த தெருவுக்குள் தான் வீடு. இரவு ஏழு

மணியளவில், அந்த பாட்டியின் உறவினர் வந்த பின் தான் கொலை

நடந்ததே தெரிந்துள்ளது.


ஆம்.... கிராமங்கள் மாறித்தான் விட்டன.

.

Monday, September 20, 2010

பூப்புனித நீராட்டு விழாக்கள்.., விளம்பரம் தேவையா..?

.

.அந்த வீதியின் முக்கிய இடங்களில் ப்ளக்ஸ் போர்டுகள். அரசியல் தலை

வருக்கோ அல்லது திருமண நிகழ்ச்சிக்கோ அல்ல. பூப்புனித நீராட்டு விழா

வுக்கான அறிவிப்பே அது. ஒரு சிறுமியின் `பெரிய’ படத்துடன்... பெருகி

வரும் புது கலாச்சாரம் இது. கிராமங்களில், சிறு நகரங்களில், மட்டு

மல்லாது, பெருநகரங்களிலும் பூப்புனித நீராட்டு விழாக்கள் இப்படி ஆடம்

பரமாக, பெரிய அளவில் கொண்டாடப்படுவது வியப்பையும் எரிச்சலை

யும் தருகின்றது.



பெண் பருவமடைந்து விட்டால் `சடங்கு’ வைப்பது சம்பிரதாயமான ஒரு

வழக்கம். முற்காலத்தில் பெண்கள் பருவமடைந்ததும், திருமணம் செய்து

கொடுத்து விடுவது பழக்கமாயிருந்தது. பெண், வயதுக்கு வந்துவிட்டால்,

`எங்கள் வீட்டில் பெண் திருமணத்துக்கு தயாராகி விட்டாள், பெண் கேட்டு

வருபவர்கள் வரலாம்' என்ற பகிரங்க அறிவிப்பாகவே இந்த விழாக்கள்

நடத்தப் பட்டனவாம். அக்காலத்தில் பெண்களை பெரியவர்களாகி விட்டால்

வெளியில் அனுப்ப மாட்டார்கள்.



ஆனால், இப்போது அப்படியில்லை. ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து

பள்ளியில் பயிலுகின்றனர். இந்நிலையில், பெண்களின் உடலில் ஏற்படும்

மிக இயல்பான, இயற்கையான நிகழ்வை, இப்படி பகிங்கரமாக அறிவிக்க

வேண்டுமா? படிப்பறிவும் நாகரீகமும் வளர வளர, இத்தகு பழம் சம்பிர

தாயங்கள் குறைய வேண்டாமா? மிகநெருங்கிய உறவினர்களுடன் வீட்டில்

வைத்து `தலைக்கு ஊற்றி ’ அடக்கமாக முடித்துக் கொள்ள முடியாதா?

அதிலும், இப்போதெல்லாம் பெண்கள், 9 லிருந்தி 11 வயதுக்குள் பருவ

மடைவது அதிகரித்து வருகிறது. குழந்தைத்தனம் மாறாத இந்த சிறுமி

களை மற்றவர் பார்வையில் ஏன் `பெரிய மனுஷி’ யாக்க வேண்டும்?

குழந்தைகளாக அவர்கள் இயல்புடன் வளர விடலாமே.!

.

Saturday, September 11, 2010

எங்கள் பிள்ளையார்.

.

தாத்தா விடு, அந்த காலத்து வீடு. முன்வாசலில் பெரிய திண்ணை,

அதைத் தொடர்ந்து பெரியக்கூடம், உள்முற்றம், சின்னக்கூடம், சின்ன

சின்ன அறைகள், அறைவீடு, அடுப்பாங்கரை, பின்னால் தோட்டம்,

மாட்டுத்தொழுவம், பின்வாசல் என அடுத்தத்தெரு வரை நீண்டிருக்கும்.

வீட்டின் முன் பக்கத்தை இடித்து `ரீமாடல் , செய்யும் போது, வீட்டின்

முன்னால் பிள்ளையார் கோயில் வைக்க வேண்டுமென அத்தை

(மாமியார்) சொன்னதால், திண்ணை இருந்த இடத்தில் பிள்ளையார்

கோயில் கட்டப் பட்டு பிள்ளையார் எங்கள் வீட்டுக்கு குடிவந்தார். அன்றி

லிருந்து அவரும் எங்கள் வீட்டின் நிரந்தர அங்கத்தினர் ஆகிப் போனார்.



அவரை எங்களில் ஒருவராக நினைத்து உரையாடிக் கொள்வோம். வேண்டு

கோள்களைக் கூட செல்லமாகவோ, மிரட்டலாகவோ அவர்முன் வைப்போம்.

தொலைந்து போன மோதிரத்தையோ, பையன்களின் பேனாவையோ, தேடித்

தருவதில் தொடங்கி, குழந்தைகள் உடல்நிலை சரியில்லாமல் போனால்,

விரைவில் குணமாக்குவதென, நிறைய வேலைகள் தருவோம். வேண்டு

தல்கள் நிறைவேறும் போது மாலை வாங்கி போடுவதாக வேண்டிக் கொள்

வோம். வேண்டியது நடந்துவிட்டால் சந்தோஷத்துடனும், நடக்காவிட்டால்

`அடுத்த தடவையாவது ஒழுங்காக நிறைவேற்றி வை’ என மிரட்டலுடனும்

மாலை வாங்கி போட்டு விடுவோம். இப்படி நிறைய மாலைகள் வாங்கி

விடுவார் எங்களிடமிருந்து.



பிள்ளையார் எங்கள் வீட்டுக்கு வந்த புதிதில்தான், `பிள்ளையார் பால் குடிக்

கிறார்’ என்ற வதந்தி நாடு முழுவதும் பரவியது. தெருவிலிருந்த சிலபெண்

களும், கிண்ணத்தில் பாலுடனும், ஸ்பூனுடனும் எங்கள் பிள்ளையாரை

முற்றுகையிட்டு பால் குடிக்கவைக்க முயற்சித்தனர். `பிள்ளையார் பால்

குடிக்கலியே’ என்று எங்கள் பிள்ளையாரின் சக்தியை சந்தேகிக்கவும், எரிச்

சலாகிப் போன நான், `எங்கள் பிள்ளையார் சின்னக் குழந்தை, ஸ்பூனில்

குடிக்கத் தெரியாது, வேணும்னா ஃபீடிங் பாட்டிலில் குடுத்துப் பாருங்க’

என்றதும் என்னை வினோதமாக பார்த்தவாறே நகர்ந்தனர்.







எங்கள் பிள்ளையார் மிகவும் சாது. விநாயகர் சதுர்த்தி அன்று பூஜை

செய்து, அவருக்கு படைக்கும் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை

போன்றவற்றை , பக்கத்து வீட்டு குழந்தைகள், நாங்கள் சாப்பிடுவதை

சந்தோஷமாக ரசிப்பாரேத் தவிர, எந்த வன்முறைகளையும் தூண்ட

மாட்டார்.

ஊர்வலம் நடத்தச் சொல்லி எங்களை தொந்தரவு செய்ய மாட்டார்.

ஊர்வலத்துக்காக கட்டாய வசூல் செய்ய மாட்டார்.

ஊர்வலம் செல்லும் போது எதிர்படும் டிவி கேபிள்களை அராஜகமாக

அறுத்தெறிய சொல்ல மாட்டார்.

இரசாயனங்களால் சிலைசெய்து சுற்றுசூழலை மாசு படுத்த சொல்ல

மாட்டார்.

மொத்தத்தில் எங்கள் பிள்ளையார் மிகவும் சாதுவானவர். எங்களுக்கு

அவரிடம், பயத்தைவிட, பக்தியைவிட பாசம் அதிகம்.

.

Monday, September 6, 2010

ஆங்கிலத்தில் உரையாட முடியாததால், ராகிங்..., தற்கொலை.?

.
.
அண்ணா பல்கலைகழக பொறியியல் மாணவி ஜோதி, நேற்று தன் வீட்டில்

தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம்,

ராசிபுரத்தில் உள்ள முள்ளிக்குறிச்சி என்ற கிராமத்தை சேர்ந்த ஜோதி என்ற

18 வயது பெண். +2வில் 1105 மதிப்பெண்கள் பெற்ற ஜோதிக்கு, அண்ணா

பல்கலைகழகத்தில் பொறியியல் (இ.சி.இ) பிரிவில் இடம் கிடைத்தது.




விடுதியில் தங்கி படித்த ஜோதி வார விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருந்த

போது, தன்னை ஆண் மாணவர்கள் எஸ்.எம்.எஸ் அனுப்பி தொந்தரவு

செய்வதாக, அண்ணனிடம் கூறி அழுதிருக்கிறாள். ஆங்கிலத்தில் சரிவர

உரையாட முடிய வில்லை என்பதால் அவளை மற்ற மாணவர்கள் கேலி

செய்ததாக தெரிய வந்துள்ளது. அவள் மொபைல் போனில் உள்ள

எஸ்.எம்.எஸ்களே சாட்சி என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


பல்கலைகழக நிர்வாகம், துணைமுதல்வர் மன்னர் ஜவஹர் முதலானார்

இதை மறுத்துள்ளனர். பல்கலைகழக வளாகத்தில் ராகிங் தடை செய்யப்

பட்டுள்ளதெனவும், புது மாணவர்களை மூத்த மாணவர்கள் சந்திக்க

அனுமதி கிடையாதெனவு்ம் தெரிவித்துள்ளார்.


ஒரு கிராமத்து விவசாயதொழிலாளியின் பெண், இத்தனை மதிப்பெண்கள்

பெற்று பொறியியல் படிப்பது, அதுவும் யுனிவர்சிட்டியில் இடம் கிடைத்தது

அந்த குடும்பத்துக்கு எத்தனை சந்தோஷமான விஷயமாக இருந்திருக்கும்?

எத்தனை கனவுகள் கண்டிருப்பார்கள்? ஆங்கிலத்தில் உரையாட முடிய

வில்லை என்ற காரணத்துக்காக அந்த பெண் தற்கொலைக்கு தள்ளப்

பட்டிருப்பது வேதனையான விஷயம் மட்டுமல்ல, அவமானகரமானதும்

கூட.



தமிழில் பொறியியல் படிப்புகள், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை

என அறிவிப்புகளை வெளியிடும் அரசாங்கம், இந்த தற்கொலைக்கு

என்ன பதில் சொல்லப் போகிறது..?

.