Thursday, February 4, 2010

சந்தோஷ கல்யாணம்.

பெண்பார்க்கும் படலம்

இல்லாமல;

வரதட்சணை, ரொக்கம்

இல்லாமல்;

பெண்ணுக்கு நகைநட்டு, சீர்செனத்தி

இல்லாமல்;

மாப்பிள்ளை `முறுக்கு’

இல்லாமல்;

பெண்ணுக்கு செயற்கைபூச்சு, ஒப்பனை

இல்லாமல்;

பயமும் பதட்டமும்

இல்லாமல்;

பிள்ளைகள் பெற்றோருக்கு

செய்து வைக்கும் ஒரு

சந்தோஷ கல்யாணம்;

அப்பா அம்மாவின்

அறுபதாங் கல்யாணம்.
.

20 comments:

ஹுஸைனம்மா said...

இதே மாதிரி இளைஞர்களின் திருமணங்களும் நடந்தால் எவ்வளவு நல்லாருக்கும்!!

Deepa said...

ஆஹா! அழகு.
உண்மை தான் அம்பிகா அக்கா.

ஹுஸைனம்மா! நியாயமான ஆதங்கம்.
ஒண்ணு பண்ணலாம்...
இளைஞர்களும் முதலில் பிள்ளை பெற்றுக் கொண்டு விட்டு அறுபது வயது வரை வெயிட் பண்ணிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்!
:-)ஹிஹி சும்மா!

ஹுஸைனம்மா said...

தீபா,

ஓ, அதனாலத்தான் இப்ப நிறைய இளைஞர்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே குழந்தை பெத்துக்கறாங்களோ??

;-D

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)

ப்ரியமுடன் வசந்த் said...

:))

தீபா

ம்க்கும்.. அதெப்பிடி வெயிட்டுவாக தொணத்தல் தாங்க முடியாது அப்புறம் கல்யாணம் முடிக்கிற வரைக்கும் எங்கப்பா பாத்துருவாக எங்கண்ணா பாத்துருவாகன்னு பொலம்பல்தான் இருக்கு...

ஹூசைனம்மா
இளைஞர்களா இளைஞிகளா?

மாதவராஜ் said...

@ அம்பிகா!
அருமை.
அந்த அறுபதாம் கல்யாணத் தம்பதிகளுக்கு, முதலில் செய்த தங்கள் கல்யாண நினைவுகள் சந்தோஷமானதாக இருக்க வேண்டும்! :-))))))


@தீபா!
வம்பி!
:-)))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

கண்ணகி said...

அட..அட...அடடா...

sathishsangkavi.blogspot.com said...

//பிள்ளைகள் பெற்றோருக்கு

செய்து வைக்கும் ஒரு

சந்தோஷ கல்யாணம்;

அப்பா அம்மாவின்

அறுபதாங் கல்யாணம்.//

சரியாச் சொன்னீங்க.....

உண்மை உண்மை.......

க.பாலாசி said...

அது என்னமோ உண்மைதாங்க....

காமராஜ் said...

ரெண்டுக்குமே கொடுப்பினை வேணும்.
மணமேடையில் உட்காரவும்,
உட்கார வைக்கவும்.

Anonymous said...

அருமை!! அருமை!!!

PONRAJ-TUTICORIN

சந்தனமுல்லை said...

அன்பு அம்பிகா அக்கா,

தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.
http://sandanamullai.blogspot.com/2010/02/page-from-my-teenage-diary.html தங்களின் பகிர்வை எதிர்நோக்கி...

முல்லை

Anonymous said...

//ஹுஸைனம்மா said...

இதே மாதிரி இளைஞர்களின் திருமணங்களும் நடந்தால் எவ்வளவு நல்லாருக்கும்!!
//

ஏன் உங்களுக்கு இளைஞர்கள் மேல் கொலைவெறி. அவங்க அறுபது வயசிலயா கல்யாணம் பண்ணிக்கணும். (சும்மா டமாசுக்கு ஹுசைனம்மா)

Thenammai Lakshmanan said...

அறுபதாம் கல்யாணம் அருமை அம்பிகா

அம்பிகா said...

ஹூசைனம்மா,
அப்படி ஒரு நாளும் விரைவில் வரும். வர வேண்டும்.

தீபா,
சேட்டை தானே!!

நன்றி அமித்தம்மா.

நன்றி வசந்த்.

நன்றி முல்லை.

அம்பிகா said...

உண்மைதான் மாதண்ணா.

முத்துலெட்சுமி,

கண்ணகி,

சங்கவி,

பாலாசி,

பொன்ராஜ்

பகிர்வுக்கு நன்றி.

அம்பிகா said...

காமராஜ் அண்ணா,

எங்களுக்கு அந்த கொடுப்பினை இருந்தது.

அம்பிகா said...

சின்ன அம்மிணி,

தேனம்மைலக்ஷ்மணன்,

உங்கள் முதல்வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

goma said...

அப்படி ஆயிடுச்சு சமூகம்!!!!